நினைத்ததை முடித்த அமெரிக்கா: ஒப்புக்கொண்டு தலையசைத்த ஈரான்!
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதல்களில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், நாட்டின் அணுசக்தி நிலையங்கள் பலத்த சேதமடைந்துள்ளன என்பதை ஈரான் அரசாங்கம் ஒப்பு கொண்டுள்ளது.
மத்திய கிழக்கில் கடந்த ஜூன் 13ஆம் திகதியிலிருந்து ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே கடும் போர் நடைப்பெற்று வந்தது.
12 நாள்களுக்குப் பின்னர், இருநாடுகளும் போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 24ஆம் திகதி அறிவித்திருந்தார்.
உறுதி செய்த ஈரான்
இந்த நிலையில், அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானில் உள்ள முக்கிய அணுசக்தி தளங்களான ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் மீது பங்கர் பஸ்டர் குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது.
அதனைதொடர்ந்து, ஈரானின் அணுத் தளங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக ட்ரம்ப் அறிவித்திருந்திருந்தார்.
இதன்படி, அமெரிக்காவின் தாக்குதலால் தங்களது அணுசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதமடைந்துள்ளதை ஈரான் இன்று (ஜூன் 25) அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.
ட்ரம்பின் எதிர்ப்பு
இது தொடர்பில் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு ஈரான் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் எஸ்மாயில் பாகேய், “எங்களது அணு தளவாடங்கள் பலத்த சேதமடைந்துள்ளன என்பது உறுதி. ஆனால், தாக்குதல்களின் முழு விவரங்கள் தற்போது வெளியிடப்பட முடியாது.”என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு அமைப்புகள், ஈரானின் அணுத் திட்டம் முற்றிலும் அழிக்கப்பட்டதாகத் தெரியவில்லை, சில முக்கிய உள்கட்டமைப்புகள் மட்டும் தான் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன எனக் கூறியிருந்தன.
எனினும், இதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதுடன், இந்த மதிப்பீட்டை அவர் முற்றிலும் நிராகரித்தும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
