குவைத்தின் அரசு அலுவலகம் மீது ஈரான் வான்வெளி தாக்குதல்
ஈரானிய ஆளில்லா விமானத் தாக்குதலால் அரசு அலுவலக வளாகத்திற்கு கணிசமான சேதம் ஏற்பட்டுள்ளதாக குவைத்தின் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த தாக்குதல் இன்ற அதிகாலை இடம்பெற்ற நிலையில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அரசாங்க தகவல்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளன.
மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மெரினா பகுதியில், வான் பாதுகாப்பு அமைப்புகளால் இடைமறிக்கப்பட்ட ஒரு பொருளின் சிதல்கள் கட்டிடம் ஒன்றைத் தாக்கியதாக, துபாய் அரச ஊடக அலுவலகம் சனிக்கிழமை அதிகாலை தெரிவித்துள்ளது.
வான்வழித் தாக்குதல்
துபாய் மெரினா பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் முகப்பில், வான்வழித் தாக்குதலில் இருந்து சிதறிய பாகங்கள் விழுந்ததால் சேதம் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தரவுத்தள அமைப்புகளில் நிபுணத்துவம் பெற்ற ஆரக்கிள் நிறுவனத்திற்குச் சொந்தமான கட்டிடத்தின் முகப்பில் இடிபாடுகள் விழுந்ததாக ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தின் விளைவாக உயிரிழப்புகளோ தீ விபத்தோ ஏற்படவில்லை.
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) கடற்படை மற்றும் விமானப் படைகள், இன்று காலை அப்பகுதி முழுவதும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டதாக ஐ.எஸ்.என்.ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஆனந்தபுரம் ஈழத்தமிழரின் வீரமும் ஓர்மமும் ஒன்றாக விளையாடிய இறுதிக்களம் 20 மணி நேரம் முன்