அமெரிக்கா - இஸ்ரேலுக்கு பேரிடி! போரில் களமிறங்கும் புதிய தரப்பு - ஈரான் அறிவிப்பு
ஈரானின் ஆதரவு பெற்ற யேமனில் உள்ள ஹவுதி கிளச்சியாளர்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை எதிர்த்து நடைபெறும் போரில் இணைவதற்கு தயாராக உள்ளதாக ஈரானிய அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நம்பகமான தகவல் வட்டாரம் ஒன்றை மேற்கோள் காட்டியே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஹவுதி என அழைக்கப்படும் யேமனின் அன்சாருல்லா இயக்கம், பாப் அல்-மண்டாப் நீரிணையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தயாராக இருப்பதாகவும், அது எளிதான பணியாக இருக்கும் எனவும் மேற்படி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய வர்த்தக போக்குவரத்து
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் 2023 ஒக்டோபர் முதல் செங்கடலில் இந்த கிளச்சிக்குழு தாக்குதல்களை நடத்தி வருகிறது.

அதன்போது, இஸ்ரேல் தொடர்புடைய நூற்றுக்கணக்கான இலக்குகளை நோக்கி தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
மேலும், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தொடர்புடைய கப்பல்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியதால், உலகளாவிய வர்த்தக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
முக்கிய கடல் வழித்தடம்
எவ்வாறாயினும், இந்த தாக்குதல்களை தடுக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இதுவரை முழுமையாக வெற்றியடையவில்லை.

இந்த நிலையில், ஹவுதிகள் பாப் அல்-மண்டாப் நீரிணையை முழுமையாக கட்டுப்படுத்த தொடங்கினால், நிலைமை மேலும் மோசமடையும் என சர்வதேச நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பாப் அல்-மண்டாப்நீரிணை, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவை இணைக்கும் முக்கிய கடல் வழித்தடமாகும். இது மத்தியதரைக் கடலையும் அரேபியக் கடலையும் இணைக்கும் முக்கிய நுழைவாயிலாக விளங்குகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |