இஸ்ரேலின் கொலை முயற்ச்சி : நூலிழையில் தப்பிய ஈரானின் முன்னாள் ஜனாதிபதி
இஸ்ரேல் (Israel) ஈரான் (Iran) இடையே நடந்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், ஈரானின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத் கொலை முயற்சியில் இருந்து நூலிழையில் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் வாகனம் டொயோட்டா லேண்ட் குரூசர் இஸ்ரேலின் தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்படுகிறது.
இருப்பினும், அவரது பாதுகாப்பு அதிகாரிகள், இந்த தாக்குதலில் இருந்து அவரைக் காப்பாற்றியுள்ளதாக ஈரான் தரவுகளை மேற்கொள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் இலக்கு
காஸாவில் ஹமாஸ் படைகளின் முதன்மையான தளபதிகள் மற்றும் தலைவர்களை இலக்குவைத்து படுகொலை செய்தது போன்று தற்போது ஈரானின் உயர்மட்ட அதிகாரிகள், விஞ்ஞானிகள் மற்றும் ஊடக அமைப்புகளை இஸ்ரேல் இலக்கு வைத்துள்ளது.
இதேவேளை, ஈரானின் முன்னாள் ஜனாதிபதியின் மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன், மத்திய தெஹ்ரானில் முகமூடி அணிந்த துப்பாக்கிதாரிகளால் மஹ்மூத் அஹ்மதிநெஜாத் படுகொலை செய்யப்பட்டதாக உறுதி செய்யப்படாத தகவல் வெளியாகியாகி வருகின்றது.
இந்த விவகாரம் தொடர்பில் அவரது குடும்ப உறுப்பினர்களோ ஈரானோ இதுவரை உறுதி செய்யவில்லை.
மஹ்மூத் அஹ்மதிநெஜாத் தனது லேண்ட் க்ரூஸரில் முஹர்ரம் விழாவில் கலந்து கொள்வதற்காக சஞ்சானுக்குச் சென்று கொண்டிருந்தத போதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
