தூக்கிலிடப்பட்ட ஹிஜாப் போராளி - முதல் முறையாக வெளிச்சத்துக்கு வந்த சம்பவம்
ஈரானில் ஹிஜாப் போராட்டத்தின்போது பாதுகாப்பு படை வீரர் ஒருவரை கத்தியால் தாக்கியதாக குற்றம் சாட்டி கைது செய்யப்பட்ட மோசென் ஷெகாரிக்கு ஈரான் புரட்சிகர நீதிமன்றில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து அவரைத் தூக்கில் இட்டு குறித்த தண்டனையை நிறைவேற்றி உள்ளனர். இந்த போராட்டங்களில் கைதாகி மரண தண்டனை விதித்து தூக்கில் இட்டு அதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
இதற்கு எதிராக நோர்வே நாட்டின் ஆஸ்லோ நகரைச் சேர்ந்த ஈரான் மனித உரிமைகள் அமைப்பின் இயக்குனர் மக்மூத் அமிரி மொகதாம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாஷா ஆமினி கொலை

ஈரானில் 'ஹிஜாப்' அணியாத மாஷா ஆமினி என்ற 22 வயதே ஆன இளம்பெண்ணை அந்த நாட்டின் அறநெறி காவல்துறை கைது செய்ததும், அவர் காவல்துறை காவலில் கடந்த செப்டம்பர் 16-ந் திகதியன்று கொல்லப்பட்டதும் ஈரானிய பெண்களை போராட்டத்தில் ஈடுபட வைத்தது.
இந்தப் போராட்டத்தை ஈரான் அரசு ஒடுக்கியது. இதில் 475 பேர் கொல்லப்பட்டதோடு 18 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.