ஈரானின் அத்தனை தலைகளையும் கொத்தாகத் தூக்கியது எப்படி... மொசாட்டின் ரகசிய ஆட்டம்!
ஈரானின் உயர்மட்டப் பாதுகாப்பு அடுக்குகளைச் சிதைத்து, அந்நாட்டின் தலைவர்களின் நடமாட்டத்தை அணுவணுவாகக் கண்காணித்து நடத்திய தாக்குதல்கள், ஒரு பிரம்மாண்ட உளவு வலைப்பின்னலின் கைவரிசையாகக் கருதப்படுகிறது.
அதிநவீன தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் ஆளில்லா வான்வழித் தாக்குதல்கள் மூலம் எதிரிக்குத் தற்காப்புக்கான எந்தவொரு வாய்ப்பையும் தராமல் அரங்கேற்றப்பட்ட இந்தத் தாக்குதல், தொழில்நுட்ப ஆதிக்கத்தின் உச்சமாகும்.
நாட்டின் மிகப்பாதுகாப்பான இடங்களிலேயே முக்கிய நபர்கள் குறிவைக்கப்பட்டது, ஈரானின் உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் எவ்வளவு பலவீனமாக உள்ளன என்பதை உலகிற்குப் பறைசாற்றியுள்ளது.
ஒரே நேரத்தில் பல தலைவர்களை வீழ்த்தியதன் மூலம் ஈரானிய அரசு இயந்திரத்தை முடக்கி, அங்கு ஒரு தற்காலிக அதிகார வெற்றிடத்தை உருவாக்கியதே அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் ரகசிய ஆட்டத்தின் நோக்கமாகப் பார்க்கப்படுகிறது.
இது உளவுத்துறையின் ஒரு வியக்கத்தக்கச் சாதனையாகக் கருதப்பட்டாலும், மத்திய கிழக்கில் ஒரு முடிவில்லாத போர்ச் சூழலை உருவாக்கியுள்ளது.
இது குறித்து விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |