போர்நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்த ஈரான் - இஸ்ரேல்: ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு
இஸ்ரேலும் (Israel) ஈரானும் (Iran) முழுமையான போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விடயத்தை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் குறித்த பதிவில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகியவை முழுமையான மற்றும் மொத்த பேச்சுவார்த்தை நிறுத்தம் ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்டது.
இந்தப் போர்நிறுத்தம் ஆறு மணி நேரத்திற்குள் தொடங்கி, 12 மணி நேரம் நீடிக்கும்.
ஈரான் முதலில் தனது போர் நிறுத்த நடவடிக்கையை தொடங்கி, 12 மணி நேரத்திற்குப் பின் இஸ்ரேல் போர்நிறுத்த இனக்கப்பாட்டுக்கு வகைத்தரும்.
இதன் மூலம், 24 மணி நேரத்தில் 12 நாட்கள் இடம்பெற்ற இந்த மோதல் முடிவுக்கு வரும்.
இந்த முடிவு போரை முடிவுக்குக் கொண்டு வர ஒரு சிறந்த வாய்ப்பு” என அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இஸ்ரேல் மற்றும் ஈரான் இதுவரை இந்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தவில்லை.
ஈரானிய அரசு ஊடகங்கள், நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தாலும், உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமெனியின் இறுதி ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
