மொசாட் குறி மொஜ்தபாவை விட்டுவைக்குமா ...தீவிரமறியா சிறிலங்கா அரசியல்வாதிகள்
போரால் சூழப்பட்ட மத்திய கிழக்கின் எண்ணெய் உற்பத்தியும் அதன் விநியோகமும் கடுமையாக அடிவாங்குவதால் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் உலக சந்தையில் இன்று ஒரு பீப்பாய் மசகு எண்ணையின் விலை 110 டொலர் என எகிறியுள்ளது.
இந்த பாரதூர நிலைமை இலங்கை உட்பட்ட எண்ணெய் இறக்குமதி நாடுகளுக்கு புதிய பாதகமாக வந்தாலும் இவைகுறித்த பிரக்ஞைகள் இல்லாத இலங்கைத்தீவின் அரசியல்வாதிகளோ தமது நாடாளுமன்ற உரைகள் மூலம் மக்களை கிச்சுகிச்சு மூட்டத்தலைப்படுகின்றனர்.
ஈரானிய தாக்குதல்களால் இன்று பஹ்ரைனின் எண்ணெய் உற்பத்தி மையத்தில் பெரிய தீப்பரவல் ஏற்பட்டுவிட்ட பின்னணியில் உலகளாவிய எரிசக்திப்பதற்றம் அதிகரித்துவருவதால் செல்வந்த நாடுகளில் ஒன்றான தென்கொரியா கூட 30 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று முதன்முறையாக எரிபொருளுக்கு உச்சவரம்பை விதித்துவிட்டது.
இந்தப்பின்னணியில் இலங்கையில் அநுர அரசாங்கம் என்னதான் மக்களுக்கு நம்பிக்கையூட்டினாலும் நாட்டில் 50 வருடத்துக்கு மேற்பட்ட வரலாறு கொண்ட, இலங்கை மின்சார சபையை நேற்று நள்ளிரவில் அதிரடியாக கலைத்து அதனை ஆறு தனித்தனி துண்டுகளாக பிரித்து கரைந்த கருவாட்டு ஆணம் சட்டிக்குள்ளே இருப்பது போல அவற்றை புதிய அரசநிறுவனங்களாக மாற்றிக்கொண்டாலும் உலகின் சமகால எரிபொருள் நெருக்கடி நிச்சயமாக இலங்கையின் சக்திவளத்துறையையும் விரைவில் பலமாக அடிக்கத்தான் போகிறது.
சிறிலங்காவை பொறுத்தவரை இன்று ஈரானின் புதிய அதிஉயர் தலைவராக அறிவிக்கப்பட்ட மொஜ்தபா கமேனிக்கு வாழ்த்துத் தெரிவித்து ஈரானுக்கும் கொஞ்சம்பாடி அமெரிக்காவுக்கு அதிகமாக ஆடி தனது ராஜதந்திர தங்கிணத்தோம்களை செய்தாலும் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானிய மொஜ்தபா நீண்டகாலம் உயிரோடு இருக்க முடியாது என சூளுரைக்கும் பின்னணியில் இந்த விடயங்களை தாங்கிவருகிறது செய்திவீச்சு..
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |