நரகத்தில் வாழ வேண்டியிருக்கும்...! தாக்குதலுக்கு தக்க பதிலடி - எச்சரிக்கும் ஈரான்
ஈரான் உள்கட்டமைப்பு மீது எந்தவொரு தாக்குதல் நடத்தப்பட்டாலும் அதேபோன்று பதிலடி கொடுக்கும் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி எச்சரித்ததாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன், ஈரான் ஹோர்முஸ் நீரிணையை திறப்பது தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கைக்கு மத்தியில் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் கடற்படை ஒரு புதிய ஒழுங்கிற்கு பாரசீக வளைகுடா தயாராகி வருவதாகக் கூறியுள்ளது.
அமெரிக்கா தாக்குதல் நடத்தும்
ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்று கூறியுள்ள டொனால்ட் டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க செவ்வாய்க்கிழமை வரை ஈரானுக்குக் காலக்கெடு விதித்துள்ளார்.

மிகவும் மிக மோசமான வார்த்தைகள் கலந்த எச்சரிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, அறிவற்றவர்களே (Crazy Bastards), செவ்வாய்க்கிழமை ஈரானில் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்களுக்கு ஆபத்தான நாளாக இருக்கும்.
இதுவரையில்லாத அளவுக்கு ஒரு பேரழிவை நீங்கள் சந்திக்கப் போகிறீர்கள். ஹோர்முஸை திறக்காவிட்டால் நீங்கள் நரகத்தில் வாழ வேண்டியிருக்கும், பொறுத்திருந்து பாருங்கள்" என எச்சரித்துள்ளார்.
அத்துடன், தனது ஆக்ரோஷமான எச்சரிக்கைப் பதிவின் இறுதியில் "Praise be to Allah" என கூறியுள்ளார்.
போர்க்குற்றங்களைத் தூண்டும் செயல்
அமெரிக்க அதிபரின் கருத்துக்களை "போர்க்குற்றங்களைத் தூண்டும் செயல்" என மூத்த அதிகாரிகள் கண்டித்துள்ளனர்.

இந்நிலையில், ஈரானின் உள்கட்டமைப்பு தாக்கப்பட்டால், நாங்களும் அதேபோல் பதிலடி கொடுப்போம் என்பதை எங்கள் ஆயுதப் படைகள் தெளிவுபடுத்தியுள்ளன," என இஸ்மாயில் பாகாயி தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |