இறுதிக்கட்டத்தை எட்டிய ஹார்முஸ் ஒப்பந்தம் - வெளியான தகவல்
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஓமானுடனான ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் தருவாயில் உள்ளது என ஈரான் தெரிவித்துள்ளது.
வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தில் இருப்பதாகக் கூறி அது குறித்த மேலதிக விவரங்கள் எதையும் வெளியிடவில்லை என சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.
மேற்கு ஆசியாவில் போர் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தம் குறித்து ஈரான் மற்றும் ஓமன் நாட்டு அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
கச்சா எண்ணெய் விலை
இந்த ஒப்பந்தத்தின்படி, சரக்கு கப்பல்கள் ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள பாதை வழியாக பாரசீக வளைகுடாவிற்குள் நுழைந்து, ஓமன் நாட்டு கட்டுப்பாட்டில் உள்ள பாதை வழியாக வெளியேறும் என்றும், இதற்கு பாதுகாப்பு வழங்குவதற்கும் கடல்சார் சூழலைப் பேணுவதற்கும் சேவைக் கட்டணம் வசூலிக்க இரு நாடுகளும் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை ஹோர்முஸ் நீரிணையையை திறப்பதற்கும்இ போரை முடிவுக்கு கொண்டு வருவதற்குமான ஒப்பந்தம் ஓரிரு நாட்களில் எட்டப்படலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிiணியில் கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கு அனுமதிக்கும் ஒப்பந்தம் குறித்த நம்பிக்கையால் நேற்று எண்ணெய் விலைகள் சற்று குறைந்தன.
சர்வதேச அளவுகோலாக கருதப்படும் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை நேற்று காலை 1.2 சதவீதம் சரிந்து ஒரு பீப்பாய்க்கு 78.43 அமெரிக்க டொலராக இருந்தது.
இதனிடையே செங்கடலில் உள்ள யான்பு துறைமுகம் மற்றும் ஏடன் வளைகுடா அருகே இரண்டு சவுதி எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கு யேமனின் ஹூதிகள் பொறுப்பேற்றுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |