அமெரிக்க தாக்குதலுக்கு முன் இந்தியாவிடம் உதவி கோரிய ஈரானிய கப்பல்! உண்மையை உடைத்த ஜெய்சங்கர்
இலங்கைக்கு அருகே ஈரான் கப்பல் அமெரிக்காவால் தாக்கப்படுவதற்கு முன்பு ஈரான் - இந்தியாவிடம் கப்பல் அனுமதியை கோரியதாக இந்திய வெளியுறவு அமைச்சர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இலங்கை அருகே அமெரிக்க தாக்குதலால் ஈரானிய கடற்படை கப்பல் மூழ்கடிக்கப்படுவதற்கு முன்பு, ஈரான் தனது மூன்று கப்பல்களுக்கு இந்திய துறைமுகங்களில் நிறுத்த அனுமதி கோரியதாக இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் இந்திய நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்ற நிலை குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க தாக்குதல்
இலங்கை அருகே அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானிய கடற்படை கப்பலான IRIS Dena சேதமடைந்த சம்பவத்திற்கு முன்பாகவே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நெருக்கடி, அலி காமெனி மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தெஹ்ரான் நகரில் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அதிகரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் மேற்கு ஆசிய முழுவதும் அரசியல் மற்றும் பாதுகாப்பு பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜெய்சங்கர்,
அப்பாஸ் அரக்சி
“ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி உடன் பெப்ரவரி 28 மற்றும் மார்ச் 5 ஆகிய திகதிகளில் தொலைபேசி மூலம் இரண்டு முறை பேசியதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர தொடர்புகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தால் அங்கு வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமையாக இருப்பதாக அவர் கூறினார்.
அரசாங்கத்தின் மதிப்பீட்டின்படி, அந்தப் பகுதியில் ஏற்பட்ட பாதுகாப்பு சிக்கல்களால் சுமார் 67,000 இந்தியர்கள் ஏற்கனவே தாயகத்திற்கு திரும்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்” என கூறியுள்ளார்.
இதற்கிடையில், ஜெய்சங்கரின் அறிக்கை இந்திய நாடாளுமன்றத்தில் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியது.
எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் எனக் கோரி வெளிநடப்பு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக வளைகுடா பிராந்தியத்தில் ஏற்படும் பதற்றம் இந்தியாவின் எரிசக்தி விநியோகம் மற்றும் வர்த்தகத்துக்கு தாக்கம் ஏற்படுத்தும் என அவர்கள் கவலை வெளியிட்டனர்.
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட இந்த அரசியல் பதற்றம் காரணமாக, சபாநாயகர் ஓம் பிர்லா குறித்து முன்வைக்கப்பட்ட தீர்மானம் தொடர்பான நடவடிக்கைகளும் தற்காலிகமாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்கு ஆசியாவின் பாதுகாப்பு நிலைமை தொடர்ந்து பதற்றமாக இருக்கும் நிலையில், ஈரான் கப்பல்கள் தொடர்பான தகவல் இந்திய அரசியல் மற்றும் இராஜதந்திர வட்டாரங்களில் மேலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |