ட்ரம்பை பின்வாங்கச் சொல்லுங்கள்! வளைகுடா நாடுகளுக்கு ஈரான் தாக்குதல் எச்சரிக்கை
அமெரிக்கத் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவந்து, அதற்குப் பதிலாகப் போரைப் பேச்சுவார்த்தை மூலம் அமைதி நிலையை கொண்டுவர டொனால்ட் ட்ரம்பை அவர்கள் சம்மதிக்க வைக்காவிட்டால் வளைகுடா நாடுகளை தீவிரமாக தாக்குவேம் என ஈரான் எச்சரித்துள்ளது.
வளைகுடா நாடுகளுடன் ஒருங்கிணைந்த ராஜதந்திர முன்னெடுப்பை ஈரான், மேற்கொண்டுள்ள பின்னணியில் இந்த விடயம் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் எண்ணெய், மின்சாரம் மற்றும் நீர் ஆலைகளைத் தாக்கும் என்றும் வெளிப்படையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நெருங்கிய அரபு நட்பு நாடுகள்
அமெரிக்காவின் மிக நெருங்கிய அரபு நட்பு நாடுகளின் எரிசக்தி வசதிகள், எண்ணெய் வயல்கள், சுத்திகரிப்பு நிலையங்கள், மின்சாரக் கட்டமைப்பு, நீர் உள்கட்டமைப்பு, போக்குவரத்து வலைப்பின்னல்கள் மற்றும் பிற மூலோபாய சொத்துக்கள் மீதான தாக்குதல்களை அந்த எச்சரிக்கை உள்ளடக்கியிருந்தது என்று ஒரு மூத்த ஈரானிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

வளைகுடா முழுவதும் கடுமையான பொருளாதார சீர்குலைவு ஏற்படும் வாய்ப்பை எழுப்புவதன் மூலம், மேலும் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான ஒரு பரந்த ஈரானிய முயற்சியின் ஒரு பகுதியான இந்தச் செய்தி, வெளியாகியுள்ளது.
இந்த விவாதங்கள் குறித்து அறிந்த இரண்டு மூத்த ஈரானிய அதிகாரிகள், இரண்டு வளைகுடா வட்டாரங்கள் மற்றும் ஒரு மூத்த பிராந்திய இராஜதந்திரி ஆகியோர், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தனது சவுதி, துருக்கி மற்றும் கத்தார் நாட்டு சகாக்களுடனும், பாகிஸ்தான் இராணுவத் தளபதியுடனும் பேசியதாகக் கூறியுள்ளார்.
மீண்டும் தாக்குதல்களைத் தொடங்குவதிலிருந்து ட்ரம்பைத் தடுப்பதற்கு, அமெரிக்கா வளைகுடா நட்பு நாடுகள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என்று அராக்சி வலியுறுத்தினார் என அந்த மூத்த தூதரக அதிகாரி கூறியுள்ளார்.
ஈரான் மீதான எந்தவொரு தாக்குதலும், வளைகுடா முழுவதும் உள்ள அமெரிக்க சொத்துக்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளுக்கு எதிரான பதிலடிக்கு வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |