திடீரென அயன்டோமில் ஏற்பட்ட சிக்கல் - தடுமாறிய இஸ்ரேல் : புகுந்து அடித்த ஈரான்
இஸ்ரேலின் (Israel) பாதுகாப்பு கவசமாக காணப்படும் அயன் டோமின் (Iron Dome) செயல்பாடு 90 சதவிகிதத்திலிருந்து 65 சதவிகிதமாக குறைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய மோதல் ஒரு வாரமாக நீடித்து வருகிறது.
இந்த 7 நாட்களில் சுமார் 400 ஏவுகணைகளை ஈரான் ஏவியிருந்ததாகவும், இதில் 40 மட்டுமே இஸ்ரேலை தாக்கியுள்ளதாகவும், மீதமிருந்த 360 ஏவுகணைகளை அயன்டோம் போன்ற இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்துவிட்டதாகவும் சர்வதேச அச்சு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அம்சம்
இந்த நிலையில், ஈரானிலிருந்து (Iran) இஸ்ரேல் நோக்கி ஏவுகணைகளில், நேற்று வரை 90% ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்ட நிலையில், இன்று (21) 65% ஏவுகணைகள்தான் இடைமறிக்கப்பட்டிருக்கிறது என்று இஸ்ரேலிய உளவுத்துறையின் மூத்த அதிகாரி ஒருவரின் தகவலை மேற்கோள்காட்டி NBC செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அம்சம் பலவீனமடைந்து வருகிறது என செய்தி வெளியான நிலையில் தற்போது உளவுத்துறையின் மூத்த அதிகாரியின் இந்த தகவல் அந்நாட்டு மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் மேம்பட்ட ஏவுகணைகள். ஈரான் மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணைகளை உற்பத்தி செய்து அதை கொண்டு தாக்கி வருகிறது.
ஹைப்பர்சோனிக் ஏவுகணை
குறிப்பாக ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ஈரான் பயன்படுத்துகிறது. இந்த வகை ஏவுகணைகள் ஒலியை விட அதிக வேகத்தில் பயணிக்கும். இதை இடைமறிக்க முடியாமல் இஸ்ரேல் திணறி வருகிறது.
இது தொடர்பில், இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், “ முன்பெல்லாம், ஈரான் ஏவுகணைகள் வருவது எங்களுக்கு 10-11 நிமிடங்களுக்கு முன்னர் தெரிந்துவிடும்.
எனவே அதை எப்படி தடுப்பது என்பதை நாங்கள் யோசித்து முடிவெடுப்போம். ஆனால், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் எங்களுக்கு வெறும் 6-7 நிமிடங்கள்தான் கொடுக்கிறது.
எனவே சரியாக திட்டமிட முடியாமல் போய்விடுகிறது. அதேபோல ஒரு ஏவுகணையில் பல குண்டுகள் இருப்பதால், அதை தடுப்பதும் சாத்தியமில்லாததாக மாற்றிவிடுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
YOU MAY LIKE THIS 👇👇👇
