இந்தியாவில் கைதான ஐ.எஸ்.ஐ.எஸ் சந்தேகநபர்: நாடு அழைத்துவர ராஜதந்திர பேச்சுவார்த்தை
இந்தியாவில் (India) கைது செய்யப்பட்ட நான்கு ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) தீவிரவாத சந்தேக நபர்களை நாட்டுக்கு அழைத்து வர பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) தெரிவித்துள்ளார்.
குறித்த தகவலை தெற்கு ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்ட நான்கு இலங்கையர்களிடம் இந்திய காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜதந்திர பேச்சுவார்த்தை
இதனடிப்படையில், சந்தேக நபர்களை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் ராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சந்தேக நபர்களிடம் உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய போதிலும் அவற்றை அவர்கள் நிராகரித்துள்ள நிலையில் நாட்டுக்கு அழைத்து வந்ததன் பின்னர் அவர்களிடம் இது குறித்து மேலும் விசாரணை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த சந்தேகநபர்கள் போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டிருப்பதாக தற்போதைய தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |