யாழில் மூன்று தீவுகளை குறி வைத்துள்ள சீனா! இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளியானது
srilanka
jaffna
china
keheliya rambukwella
By Vasanth
யாழ்ப்பாணத்தில் மூன்று தீவுகளில் சீனாவின் திட்டங்களை ஆரம்பிப்பதற்கு இலங்கையின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ”த ஹிந்து” பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.
இந்த வருடம் ஜனவரி 18 ஆம் திகதி அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதிக்கு ஏற்ப, நயினா தீவு, நெடுந்தீவு மற்றும் அனலைதீவில் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல,
“எந்தவொரு நாடும் திட்டங்களுக்கான கோரிக்கையை விடுக்க முடியும்.எனினும் அது தொடர்பில் அரசாங்கம் மாத்திரமே தீர்மானம் எடுக்க முடியும்” என அவர் தெரிவித்துள்ளார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி