அடேய் அர்ச்சுனா - நிப்பாட்டுடா குமரன் : ஒருமையில் விழித்த அமைச்சர் சந்திரசேகர்
நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒருமையில் விழித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar ) “ஒருமையில் இல்லை பன்மையில் இல்லை தேவை ஏற்பட்டால் கீழ்மையிலும் விழிப்பேன்” என தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (25.03.2025) யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன் பொழுது திட்டங்கள் தொடர்பில் அதிகாரிகளிடையே நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் (Ramanathan Archchuna) கேள்வி எழுப்ப முற்பட்ட பொழுது நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் (K.Ilankumaran) மற்றும் அர்ச்சுனா இடையே முரண்பாடு ஏற்பட்டது.
ஒருமையில் விழித்த அமைச்சர்
இதன்போது, “அடேய் அர்ச்சுனா”, “நிப்பாட்டு டா குமரன்” எனும் சொற்களை பயன்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்களை நோக்கி கடற்றொழில் அமைச்சர் விழித்தார்.
தொடர்ந்து சபையினை கட்டுபடுத்த முடியாத நிலையில் யாழ். மாவட்ட செயலரின் மூலம் குறித்த கூட்டத்தினை நிறைவு செய்வதாக தெரிவித்து கூட்டத்தினை இடையில் இடைநிறுத்தினார்.
மேலும், தொடர்ச்சியாக ஊடகவியலாளர்களால் பின்வருமாறு கேள்வி எழுப்பபப்ட்டது.
முறையற்ற தலைமைத்துவம்
கேள்வி : ஒரு அமைச்சராக இருந்த வண்ணம் நாடாளுமன்ற உறுப்பினரை இவ்வாறு விழிக்கலாமா?
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கூட உங்களுக்கு முறையான தலைமைத்துவம் இல்லை என குற்றம் சுமத்தியுள்ளார்?
பதில் : இன்று இந்த கூட்டத்தினை நடாத்த அர்ச்சுனா எமது அரசாங்கம் மற்றும் ஜனாதிபதி தேவையற்ற பல விடயங்களை இணைத்து அதிகாரிகள் மீதும் குற்றச்சாட்டு வைத்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களை தேவையேற்பட்டால் ஒருமையில் பன்மையிலும் கீழ்மையிலும் விழிப்பேன் எனவும் கூறினார்.
இந்நிலையில் இது குறித்து எதிர்வரும் காலங்களில் ஒழுங்காக தலைமைத்துவத்துடன் நடைமுறைகளை எடுப்பீர்களா என வினவிய பொழுது நடவடிக்கைகளை எடுக்க முயற்சிக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 8 மணி நேரம் முன்
