யாழில் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய நபர் உயிர்மாய்ப்பு
யாழ்ப்பாணத்தில் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர், தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், காரைநகர் பகுதியைச் சேர்ந்த சிறுமியைத் வன்புணர்வுக்கு உள்ளாக்கினார் எனும் குற்றச்சாட்டில், கடந்த 3ஆம் திகதி காரைநகர் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபரை ஊர்காவற்துறை காவல்துறையினர் கைது செய்ய அவரது வீட்டுக்குச் சென்றபோது குறித்த சந்தேகநபர் தனது உயிரை மாய்க்க முயன்றுள்ளார்.
மேலதிக சிகிச்சை
அவ்வேளை, அவர் காப்பாற்றப்பட்டு காரைநகர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அவர், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
