தையிட்டி விகாரை போராட்ட விவகாரம் : ஒன்றரை வருடத்தின் பின் ஆரம்பமாகும் விசாரணை
யாழ் (Jaffna),தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு காவல்துறையினால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் ஒன்றரை வருடத்தின் பின்னர் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரணையை ஆரம்பித்துள்ளது.
தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றக்கோரி கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் முன்னெடுக்கப்பட்டிருந்த ஜனநாயக ரீதியான போராட்டத்தின் போது பலாலி காவல்துறையினரால் அராஜகமான அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டு சட்டவிரோத கைதுகள் இடம்பெற்றிருந்தது.
இதனையடுத்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் யாழ். பிராந்திய காரியாலயத்தில் எட்டுப் பேரினால் காவல்துறையினருக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
எனினும், காரணம் எதுவுமின்றி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமை காரியாலயத்தால் குறித்த முறைப்பாட்டு கோவைகள் யாழ். பிராந்திய காரியாலயத்திலிருந்து கையேற்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாக மனித உரிமைகள் ஆணைக்குழுவால் விசாரணை எதுவும் நடைபெற்றிருக்கவில்லை.
இந்நிலையில், ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொழும்பு காரியாலயத்தில் இன்றையதினம்(21) விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தையிட்டி விவகார செயற்பாடு குறித்து நாடாளுமன்ற வரவு செலவுத்திட்ட விவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சாட்டியிருந்த நிலையிலேயே இந்த விசாரணை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்