சாரதியை கடுமையாக தாக்கிய குற்றச்சாட்டில் மூவர் கைது
Sri Lanka Police
Jaffna
Sri Lanka
Sri Lanka Police Investigation
Northern Province of Sri Lanka
By Shadhu Shanker
பட்டா ரக வாகனத்தை வழிமறித்து , அதன் சாரதியை கடுமையாக தாக்கிய குற்றச்சாட்டில் 03 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை , உயரப்புலம் பகுதியில் கடந்த திங்கட்கிழமை(18) இரவு வீதியில் பயணித்த பட்டா ரக வாகனத்தை மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் அடங்கிய கும்பல் வழி மறித்து , சாரதியை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்று இருந்தது.
சம்பவத்தில் காயமடைந்த சாரதி , சிகிச்சைக்காக யாழ்,போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விசாரணைகள்
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த மானிப்பாய் காவல்துறையினர் , தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில் மானிப்பாய், கல்வியங்காடு மற்றும் மணியந்தோட்டம் பகுதிகளை சேர்ந்த மூன்று இளைஞர்களை நேற்று முன் தினம் (19) கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 13 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்