எட்டு மணிநேர மின் வெட்டு! பொது பயன்பாட்டுகள் ஆணைக்குழுவின் தலைவர் எச்சரிக்கை
நாட்டில் நாளொன்றிற்கு 8 மணித்தியாலத்திற்கும் அதிகநேர மின்வெட்டை நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய நிலைமை ஏற்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க (Janaka Ratnayake) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் தொடர்ந்தும் தவறான நிதி கொள்கை பின்பற்றப்படுமாக இருந்தால் இந்த நிலைமை ஏற்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக 700 மெகா வோர்ட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய மின் உற்பத்தி நிலையங்களின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டு, மின் வெட்டை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
மின்வெட்டை தவிர்ப்பதற்கு பல யோசனைகளை தாம் அரசாங்கத்திற்கு முன்வைத்த போதிலும், அரசாங்கம் அதனை நடைமுறைப்படுத்தவில்லை.
எதிர்வரும் 2 மாதங்களுக்கான மின்வெட்டை தவிர்ப்பதற்கு, 150 மில்லியன் ரூபா மாத்திரமே தேவைப்படுகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.