மக்கள் போராட்டம் வெற்றியளித்துள்ளது! நிச்சயம் தீர்வு கிடைக்கும் - இராஜாங்க அமைச்சர் நம்பிக்கை
முயற்சி செய்யாமல் எதுவும் கிடைக்காது. அடையாள வேலை நிறுத்த போராட்டம் மூலம் மக்கள் தமது ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளனர் எனவ இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச்செயலாளரும் வீடமைப்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ஆறுமுகன் தொண்டமான் இருந்த காலப்பகுதியில் உள்ள ஒற்றுமைஇன்றுமுதல் காணப்படுகிறது எனவும் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் சம்பள உயர்வு தொடர்பில் சாதகமான முடிவு கிடைக்கும் என நம்புகின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஹட்டன் - நோர்வுட் பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு அஸ்கிரிய மல்வத்து ஒயா விகாரையின் பிரதான தேரர், பேராயர் ஜானி பெனோன்டோ, இந்து மதகுருமார் ஆசிரியர்கள் மற்றும் தனியார் போக்குவரத்து சாரதிகள் வர்த்தகர்கள் ஆகியோர் இணைந்து அதரவினை வழங்கியிருந்தகர்.
இதன்மூலம் காரணமாகவே எமது ஆயிரம் ரூபாவிற்கான ஒருநாள் அடையாள வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் வெற்றியளித்துள்ளது. எமக்கு ஜனாதிபதி அவர்களின் மீது நம்பிக்கையுள்ளது நிச்சயமாக எமது பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளத்தை பெற்று கொடுப்பார்.
இன்றய தினம் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டமானது அரசாங்கத்திற்கு எதிரானஆர்ப்பாட்டமல்ல பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டமாகும்.
எதிர்வரும் திங்கட்கிழமை இடம் பெறவுள்ள பேச்சிவார்த்தையின் பிறகு நாம்உத்தியோக பூர்வமான அறிவிப்போம் கூட்டு ஒப்பந்தத்தை எவரும் அடிமை சாசனம் என்று கூறமுடியாது.
அநேகமானோர் கூட்டு ஒப்பந்தத்தை விரும்புகின்றனர்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்றஉறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதிகனகராஜ் மற்றும் பி.சக்திவேல், நோர்வுட் பிரதேசசபையின் தலைவர் ரவி குழுந்தைவேல் என பலரும் கலந்து கொண்டனர்.