3 மில்லியன் ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளை : நான்கு பெண்கள் கைது
பொரளையிலுள்ள நகைக்கடை ஒன்றில் 3 மில்லியன் ரூபா பெறுமதியான நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ள நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருட்டுக்கு உதவிய குற்றச்சாட்டில் திருமணமான தம்பதியருடன் பொமிரிய, கடுவெல, மாலபே மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நான்கு பெண்கள் உட்பட ஐவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்தக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் இருவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும், இவர்கள் கம்பஹாவில் உள்ள நிதி நிறுவனமொன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் உட்பட பல கொள்ளைச் சம்பவங்களின் சந்தேக நபர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 11ஆம் திகதி பொரளையிலுள்ள நகைக்கடை ஒன்றில் புகுந்த கொள்ளையர்கள் இருவர் துப்பாக்கி முனையில் 32 பவுண் தங்கத்தினை கொள்ளையடித்துள்ளனர்.
இதில் 32 பவுண் தங்கத்தில் 18 பவுண் தங்கம் திருகோணமலை, இரத்தினபுரி, மாத்தளை உள்ளிட்ட பல பகுதிகளில் அடகு வைக்கப்பட்டும் விற்பனை செய்யும் போதே காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனின் மேற்பார்வையில் பொரளை காவல்துறை, மேல் மற்றும் தெற்குப் பிரதேச குற்றத்தடுப்புப் பிரிவினர் மற்றும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.