அரசுக்கு பேரழிவு தான் மிச்சம்! எச்சரிக்கும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
srilanka
gotabhaya rajapaksa
johnston fernando
By Vasanth
ஜனாதிபதியும், அரசாங்கமும் ஒரு தீர்மானத்தை எடுத்தால் அதனுடன் அமைச்சர்கள் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அவ்வாறு இணையாது வேறு நோக்கங்களின் பின்னால் செல்ல முயற்சிப்பது பாரிய அழிவை ஏற்படுத்தக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.
கொழும்பில் நேற்றையதினம் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார். இதன்போது, எதிர்கட்சிகளின் சவால்களை வெற்றிபெற்று ஜனாதிபதியை பதவிக்கு கொண்டு வந்தது இந்த நாடு.
பின் பிரதமரை நியமித்து அரசாங்கத்தை அமைத்து சரியான முடிவுகளை எடுக்கும் போது, அந்த தீர்மானங்களுடன் இணைந்திருக்க வேண்டும்.
சில நேரங்களில் பௌத்த பிக்குகள் சிலரை தூண்டி விடுகின்றனர். ஆகையால் இந்த விடயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி