ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை விடயத்தில் மறுக்கப்பட்ட நீதி - 15 ஆண்டுகள் கடந்தும் தொடர்கதை....

murder memorial joseph pararajasingham 15th
By Vanan Dec 25, 2021 12:05 PM GMT
Report

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை விடயத்தில் சர்வதேச நாடுகள் மீது கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சார்பாக உலக நாடுகளோ, சர்வதேச அமைப்புகளோ நீதியை பெற்றுத் தரவில்லை என அவர் கூறியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசெப் பரராஜசிங்கத்தின் 15 ஆம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு முகப்புத்தக சமூக வலைத்தளத்தில் பா.அரியநேத்திரன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக உலக நாடுகளும், சர்வதேச அமைப்புகளும் அனுதாப கவலையை மாத்திரமே வெளியிட்டதாக அவர் விமர்சித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜனநாயகப் பண்புகளுக்கமைய நாடாளுமன்றம் சென்று அடிவாங்கிய வரலாறு தமிழினத்திற்கு நிறையவே உண்டு. காலிமுகத்திடலில் அமைதியாக சத்தியாகிரகம் மேற்கொண்ட தமிழ் தேசிய மக்கள் பிரதிநிதிகள் மீது தடியடிப்பிரயோகம் செய்த வரலாறு காணப்படுகிறது.

2004 தொடக்கம் 2009, வரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாமனிதர் ஜோசப் பரராசசிங்கம் உட்பட மாமனிதர் ரவிராஜ், மாமனிதர் சிவனேசன், ஆகிய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வரலாறு ஊடாக இலங்கையின் ஆட்சி எப்படிப்பட்டது என்பதை சர்வதேசம் புரியவேண்டும்.

மணலுள் தலை புதைத்த தீக்கோழிகளாய் உண்மையான களநிலையைக் காணமறுக்கும் அல்லது மறக்கும் சர்வதேச அபிப்பிராயம் குறித்த கவலைகளை ஒதுக்கிவிட்டு மண்ணுக்காய் மரித்தவர்களின் அபிலாசைகளைக் கணக்கிலெடுத்து முன்னகர்வதே நாம் அவர்களுக்குச் செய்யும் இதயபூர்வமான அஞ்சலியாகும் என அரியநேத்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலையுடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் கைதான கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐவரும் மஹிந்த - கோட்டாபய அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறிய பின்னர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 13 ஆம் திகதி சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐவரையும் முழுமையாக குறித்த வழக்கில் இருந்து விடுதலை செய்து, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி டீ.எஸ் சூசைதாசன் உத்தரவிட்டிருந்தார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம் 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் திகதி நள்ளிரவு 12:15 அளவில் மட்டக்களப்பு புனித மேரி தேவாலயத்தில் வைத்து அடையாளம் தெரியாதவர்களால் சுட்டு கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

ReeCha
மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
கண்ணீர் அஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, London, United Kingdom

13 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
நன்றி நவிலல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026