படுகொலைகளை வைத்து அரசில் பிழைப்பு நடத்தும் சாணக்கியன்: சீறும் பிள்ளையான் அணி

Pillayan Shanakiyan Rasamanickam Sri Lanka
By Raghav Dec 28, 2024 04:00 AM GMT
Report

ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலையை வைத்து சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) போன்ற அரசியல்வாதிகள் அரசியல் பிழைப்பு நடாத்துவது அவரின் ஆன்மாவை கேவலப்படுத்தும் ஈனச்செயல் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தெரிவித்துள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் நேற்றையதினம் (27.12.2024) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறி்க்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடாளுன்ற உறுப்பினராக இருந்த ஜோசப் பரராஜசிங்கம் ( Joseph Pararajasingham) படுகொலையின் பின்னனியில் இருந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் ஐவர் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஐந்து வருட தடுப்புக்கு காவலுக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

ஆளுங்கட்சி எம்.பிக்கு எதிராக காவல்நிலையம் சென்ற மனைவி

ஆளுங்கட்சி எம்.பிக்கு எதிராக காவல்நிலையம் சென்ற மனைவி

பயங்கரவாத தடுப்புச்சட்டம்

குறித்த சந்தேக நபர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் எவ்வித ஆதாரமும் அற்றவை என்பதை சுட்டிக்காட்டி அவர்களை நிரபராதிகள் என  மேல் நீதிமன்றம் விடுவித்து விடுதலை செய்திருந்தது.

படுகொலைகளை வைத்து அரசில் பிழைப்பு நடத்தும் சாணக்கியன்: சீறும் பிள்ளையான் அணி | Joseph Pararajasingham Pillayans Party Accuses Him

இவ் வழக்கில் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலையானவர்களில் எமது கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதல் முதல்வருமான சிவநேசதுரை சந்திரகாந்தனும் (Pillayan) ஒருவராவார்.

இந்நிலையில் குறித்த நீதிமன்றத்த தீர்ப்பின் பின்னரும் ஜோசப் பரராஜசிங்கம் கொலைக்கு காரணமானவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்று மட்டக்களப்பு (Batticaloa) நாடாளுன்ற உறுப்பினரான சாணக்கிய ராஜபுத்திரன் அடிக்கடி சித்தரித்து வசைபாடி வருவதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

நாட்டை கவிழ்த்திய கோட்டாபயவின் ஆட்சி: நினைவு கொள்ளுமாறு அநுர அரசுக்கு வலியுறுத்து!

நாட்டை கவிழ்த்திய கோட்டாபயவின் ஆட்சி: நினைவு கொள்ளுமாறு அநுர அரசுக்கு வலியுறுத்து!

ஜோசப் பரராஜசிங்கம் 

அத்தோடு ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலையை வைத்து  சாணக்கியன் போன்றவர்கள் அரசியல் பிழைப்பு நடாத்துவதானது  ஜோசப் பரராஜசிங்கத்தின் ஆன்மாவை கேவலப்படுத்தும் ஈனச்செயலாகும்.

படுகொலைகளை வைத்து அரசில் பிழைப்பு நடத்தும் சாணக்கியன்: சீறும் பிள்ளையான் அணி | Joseph Pararajasingham Pillayans Party Accuses Him

எந்த வேளையிலும் அரசியல் காழ்புணர்ச்சியின் வெளிப்பாடாக சிவநேசதுரை சந்திரகாந்தன்  நோக்கி சுட்டுவிரல் நீட்டுவது குறித்த படுகொலைக்குரிய உண்மையான குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கிலானதா? அத்தகைய திசை திருப்பும் முயற்சியொன்றில் சாணக்கிய ஈடுபடுகின்றாரா? என்கின்ற சந்தேகங்களும் எல்லோருக்கும் எழுந்திருக்கின்றது.

எது எப்படியிருப்பினும் அவரது உண்மைக்கு புறம்பான அரசியல் அவதூறு பேச்சுக்கள் எமது கட்சித் தலைவர் அவர்களின் சுய கௌரவத்தை கேள்விக்குள்ளாக்குவதையும் எமது கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதனையும் தொடர்ந்து அனுமதிக்க முடியாது.

முகப்புத்தகத்தை வைத்து எம்.பி பதவியை சீரழிக்கின்றார் அர்ச்சுனா : கடுமையாக சாடிய சகாதேவன்

முகப்புத்தகத்தை வைத்து எம்.பி பதவியை சீரழிக்கின்றார் அர்ச்சுனா : கடுமையாக சாடிய சகாதேவன்

நீதிமன்ற அவமதிப்பு

நீதிமன்றினால் நிரபராதியாக தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவரை மீண்டும் மீண்டும் குற்றவாளி என சித்திரித்து உண்மைக்கு புறம்பாக மக்களிடையே பேசிவருவதானது நீதிமன்றத்தினுடைய தீர்ப்பைக் கேள்விக்குள்ளாக்குவதுடன் இலங்கையின் நீதித்துறையின் மாண்பை அவமதிக்கின்ற செயலாகும்.

படுகொலைகளை வைத்து அரசில் பிழைப்பு நடத்தும் சாணக்கியன்: சீறும் பிள்ளையான் அணி | Joseph Pararajasingham Pillayans Party Accuses Him

எனவே நாடாளுன்ற உறுப்பினர் சாணக்கியன் நீதிமன்ற அவமதிப்புக்கெதிரான செயற்பாட்டிற்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோருவதுடன் நாமும் இதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை தொடரவுள்ளோம்.

எது எவ்வாறு இருப்பினும் ஜோசப் பரராஜசிங்கம் கொலைக்குரிய உண்மையான குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுடன் எவர் ஒருவர் சட்டத்திற்கு முரணாக செயற்படுகின்றாரோ அவர் எந்தவிதமான பாரபட்சம் இன்றி சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி மிக உறுதியாக உள்ளது எனவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய கடற்றொழிலாளர் விவகாரத்தில் இனிமேல் பேச்சுவார்த்தை இல்லை - அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

இந்திய கடற்றொழிலாளர் விவகாரத்தில் இனிமேல் பேச்சுவார்த்தை இல்லை - அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

இந்தியாவின் முன்னாள் பிரதமரின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர இரங்கல்!

இந்தியாவின் முன்னாள் பிரதமரின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர இரங்கல்!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

27 Oct, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024