போர்க் குற்றங்களை இழைத்தவர்களுக்கு கெடுபிடி - அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டம்
அமெரிக்காவில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள புதிய சட்டம் மூலம் உலக நாடுகளை பெரும் அதிச்சிக்குக்கு உள்ளாகியுள்ளது.
எந்தவொரு நாட்டிலும் போர்க்குற்றங்களை இழைத்தவர்கள் அமெரிக்காவில் இருந்தால் அவர்களைத் தண்டிக்கக்கூடிய “போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிச்சட்டம்” அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் கையெழுத்துடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இதற்கு முன்னர் நடைமுறையிலிருந்த சட்டத்தைப் பொறுத்தமட்டில் அதனூடாக அமெரிக்காவிற்குள் அல்லது அமெரிக்காவுக்கு வெளியில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட அமெரிக்கப் பிரஜைகள் அல்லது அமெரிக்க இராணுவத்தில் (படைப்பிரிவில்) அங்கம் வகிப்பவர்களை மாத்திரமே விசாரணைக்கு உட்படுத்தித் தண்டிக்க முடியும்.
எவரையும் விசாரணைக்கு

ஆனால் குறித்த நடைமுறை மூலம் அமெரிக்காவில் புலம்பெயர்ந்து வாழும் எவரையும் விசாரணைக்கு உற்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.