இந்தியாவிலிருந்து வந்த அழைப்பு : புதுடில்லி பறந்த டில்வின் உள்ளிட்ட ஜே.வி.பி குழுவினர்
"இந்திய கலாசார உறவுகள் கவுன்சிலின்" (ICCR) அழைப்பின் பேரில் ஜேவிபி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட குழுவினர் இன்று (05) காலை புதுடில்லிக்கு புறப்பட்டனர்.
புதுடில்லியை அடுத்து, இந்த விஜயத்தில் குஜராத் மற்றும் கேரள மாநிலங்களுக்கான வருகைகளும் அடங்கும், மேலும் அந்த மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படும்.
இந்தியா சென்றுள்ள ஜே.வி.பி குழுவினர்
மேலதிகமாக, இந்தியாவில் விவசாயம், தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு தொடர்பான மையங்களைப் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த விஜயத்திற்காக ஜேவிபி பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவுடன் நிறுவனங்களுக்கு இடையேயான ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ஜனக அதிகாரி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருணைநாதன் இளங்குமரன், கிட்னன் செல்வராஜ், ஜேவிபி ஊடகப் பிரிவு உறுப்பினர் ஹேமதிலக கமகே மற்றும் ஜேவிபி சர்வதேசக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் கல்பனா மதுபாஷினி ஆகியோர் அடங்குவர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |