மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டில் கஞ்சிபானியின் மாமா சுட்டுக்காலை!
மாளிகாவத்தையில் உள்ள பீ.சி.சி பாலத்திற்கு அருகில் சில மணி நேரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த நபரினால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட நபர் தப்பிச் சென்றதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர், கஞ்சிபானி இம்ரான் எனப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற செயல்களுடன் தொடர்புடையவரின் நெருங்கிய உறவினர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
கஞ்சிப்பானி
சங்கராஜ மாவத்தையில் உந்துருளியில் பிரவேசித்த இருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர் காயமடைந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கட்டுமானப் பொருள் விற்பனை நிலையமொன்றின் உரிமையாளர் எனவும், திட்டமிட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் கஞ்சிபானி இம்ரானின் உறவினர் எனவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச்சென்ற சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக தீவிர விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |