தொடர்ச்சியாக நாட்டை உலுக்கும் காவிகளின் கொடூர செயல்கள்...! மற்றுமொரு சிறுமிக்கு நேர்ந்த கதி
கண்டியில் சிறுமி ஒருவரைத் தகாத முறைக்கு உட்படுத்திய பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் அவருக்கு உடந்தையாக இருந்த பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவத்தில் 15 வயதுடைய சிறுமி ஒருவரே பாதிக்கப்பட்டுள்ளார்.
பௌத்த பிக்கு
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பௌத்த பிக்கு, பாதிக்கப்பட்ட சிறுமியினது தந்தையின் சகோதரர் எனக் காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த பிக்கு 25 வயதுடையவர் எனவும் பகிரவகந்த பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் பணியாற்றியவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இந்த்க் குற்றத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண், அதே பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சரீரப் பிணைகள்
கடந்த 20 ஆம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் மறுநாள் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது, சந்தேகநபரான பௌத்த பிக்குவை இன்றைய தினம் (01-06-2026) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதேவேளை, கைது செய்யப்பட்ட பெண்ணைத் தலா இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கண்டி காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே அனுராதபுரத்தில் சிறுமி ஒருவரை முக்கிய பொறுப்பில் இருந்த பௌத்த துறவி ஒருவர் பாலியல் ரீதியான துர்நடத்தைக்கு உட்படுத்திய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மற்றுமொரு பிக்குவின் மோசமான செயல் அம்பலமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |