கேப்பாபுலவு காணி விடுவிப்பு விவகாரம்! இராணுவ உயர் அதிகாரியை சந்தித்த மக்கள் ஏமாற்றத்தில்

Sri Lankan Tamils Tamils Mullaitivu Sri Lanka
By pavan Mar 28, 2024 06:24 AM GMT
Report

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட கேப்பாபுலவு மக்கள் இலங்கை இராணுவத்தின் முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகம் உள்ளிட்ட இராணுவ பிரிவுகளால் அபகரிக்கப்பட்ட கேப்பாபுலவு மக்களுக்கு சொந்தமான அவர்களின் பூர்வீக நிலமான 62 குடும்பங்களின் 171 ஏக்கர் காணியினை விடுவிக்க கோரி பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வந்தார்கள்

இந்த நிலையில், நேற்று (27) தங்கள் காணிகளை விடுவிக்க கோரி கேப்பாபுலவு மக்கள் கேப்பாபுலவு இராணுவ படைத்தலைமையகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

கொலம்பியாவில் கைப்பற்றப்பட்ட பல கோடி டொலர் பெறுமதியான போதைப்பொருள்

கொலம்பியாவில் கைப்பற்றப்பட்ட பல கோடி டொலர் பெறுமதியான போதைப்பொருள்

இராணுவ புலனாய்வாளர்கள்

நேற்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட இலங்கை இராணுவத்தளபதியிடம் தங்கள் கோரிக்கையினை முன்வைக்கவுள்ளதாக தெரிவித்து கேப்பாபுலவு படைத்தலைமையகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பினை முன்னெடுத்த வேளை போராட்டத்தினை நிறுத்த இராணுவத்தளபதியினை சந்திக்க போராட்ட மக்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்கும் நடவடிக்கையினை இராணுவ புலனாய்வாளர்கள் ஏற்பாடு செய்துள்ளார்கள்.

கேப்பாபுலவு காணி விடுவிப்பு விவகாரம்! இராணுவ உயர் அதிகாரியை சந்தித்த மக்கள் ஏமாற்றத்தில் | Keppapulavu Protest Tamils Land

இதற்கமைய மாலை 3.00 மணிக்கு இராணுவத்தளபதியினை சந்திக்கவுள்ளதாக நேரம் கொடுத்து அதற்காக 5 பேரின் பெயர் விபரங்கள் அடையாள அட்டை இலக்கம் என்பன போராட்டகாரர்களிடம் இருந்து எடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து கவனயீர்ப்பினை நிறைவிற்கு கொண்டுவந்துள்ளார்கள்.

இந்த நிலையில் மாலை 5.00 மணியளவில் கேப்பாபுலவு இராணுவ முகாமிற்குள் இருந்து உலங்கு வானூர்தி மூலம் இராணுவத்தளபதி வெளியேறியுள்ளதை அவதானிக்கமுடிந்த வேளையில் போராட்ட காரர்களை இராணுவ தளபதியினை சந்திக்க அழைத்து சென்றுள்ளார்கள்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சென்ற கணவரை காணவில்லை! மனைவி முறைப்பாடு

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சென்ற கணவரை காணவில்லை! மனைவி முறைப்பாடு

ஏமாற்றத்தில் மக்கள்

அங்கு வன்னி பிராந்தியத்தின் உயர் அதிகாரி ஒருவரே இவர்களை சந்தித்துள்ளார்

இரவு 7.45 மணிவரை சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதன்போது குறித்த இராணுவ உயர் அதிகாரி கேப்பாபுலவு இராணுவமுகாம் அகற்றப்படாது என்றும் அந்த பகுதியில் உள்ள மக்களின் காணிகள் எவ்வளவோ அவ்வளவு காணிகளை முகாமிற்கு அருகில் உள்ள பகுதிகளில் கொடுத்து வீடுகளை கட்டித்தருவதாக தெரிவித்துள்ளார்.

கேப்பாபுலவு காணி விடுவிப்பு விவகாரம்! இராணுவ உயர் அதிகாரியை சந்தித்த மக்கள் ஏமாற்றத்தில் | Keppapulavu Protest Tamils Land

கேப்பாபுலவில் படை முகாம் இருக்கும் என்றும் மாற்றுக்காணி வழங்கவுள்ளதாகவும் அரசாங்கம் நிறைய செலவு செய்து படைமுகாமினை அமைத்துள்ளது என்றும் அதற்கான வரைபடங்களை காட்டி விளக்கியுள்ளதாகவும் இரணுவ உயர் அதிகாரியுடன் பேச்சில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்

கேப்பாபுலவு காணி விடுவிப்பு விவகாரம்! இராணுவ உயர் அதிகாரியை சந்தித்த மக்கள் ஏமாற்றத்தில் | Keppapulavu Protest Tamils Land

பேச்சுக்களில் கலந்துகொண்ட கேப்பாபுலவு மக்கள் இராணுவ அதிகாரியுடன் முரண்பட்ட நிலையில் எங்கள் காணிதான் எங்களுக்கு வேண்டும் என்று தெரிவித்து பேச்சுக்களை முறித்து வெளியேறியுள்ளதுடன் மக்களின் கோரிக்கைக்கு அமைய குறித்த அதிகாரி மட்டுமல்ல இன்னும் மேல் அதிகாரிகளுடன் கதைத்து முடிவு எடுக்க நேரகாலம் தேவை என்றும் அதற்கான காலஅவகாசம் தேவை என்று தெரிவித்துள்ளதாக பேச்சுக்களில் கலந்துகொண்ட கேப்பாபுலவு மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, குருமன்காடு

09 Oct, 2015
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, Wembley, United Kingdom

09 Oct, 2023
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

Kollankaladdy, நுவரெலியா, Ontario, Canada

07 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், சுண்டிக்குளி, Vancouver, Canada, Brampton, Canada

05 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025