கிளிநொச்சியில் ஆலய பசுக்கள் இறைச்சிக்காக விற்பனை: கடும் குற்றச்சாட்டு
கிளிநொச்சியில் (Kilinochchi) ஆலய பசுக்கள் இறைச்சிக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கிளிநொச்சி - உருத்திரபுர சிவன் ஆலயத்தின் நல்ல இன பசு மாடுகளே இவ்வாறு விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த குற்றச்சாட்டை ஆலயத்தின் அறங்காவலர்சபை முன்வைத்துள்ளது.
ஆலயத்தின் திருவிழா
இது தொடர்பில் மேலும் தெரிவியவருகையில், இந்த ஆலயத்தின் திருவிழாவுக்கு என ஒரு நிர்வாகக் குழுவானது தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த குழுவாது அறங்காவலர் சபையின் கீழ், திருவிழா காலத்தில் மட்டுமே செயற்படும் வண்ணம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
பசுமாடுகள் இறைச்சி
இந்தநிலையில், திருவிழா நிறைவடைந்த பின்னரும் அந்த நிர்வாகம் தொடர்ந்து செயற்படுவதாகவும் மற்றும் அந்த நிர்வாகம் ஆலயத்தின் செயற்பாடுகளில் தன்னிச்சையாக தீர்மானம் எடுப்பதாகவும் அறங்காவலர் சபையால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அத்தோடு, ஆலயத்திற்கு நேர்த்திக்காக வழங்கப்பட்ட நல்ல இன பசுமாடுகள் இறைச்சிக்காக விற்பனை செய்யப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நிறைவேற்று குழு
இவ்வாறு விற்பனை செய்து பெறப்பட்ட 20 இலட்சம் ரூபா பணம் இதுவரை வங்கி கணக்கிற்கு வைப்புச் செய்யப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனுடன், உரிய அதிகாரிகளுக்கு இது குறித்து தெரியப்படுத்தியும் அவர்கள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
எனவே திருவிழா குழுவானது ஆலயத்தின் நிர்வாக நிறைவேற்று குழு போன்று செயற்படுவதை தடுக்குமாறும், அந்த குழுவின் காலப்பகுதி நிறைவடைந்தமையால் அந்த குழுவை கலைக்குமாறும் மற்றும் இந்து கலாச்சார திணைக்களம் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
