ஆசிரியரால் தாக்கப்பட்ட மூன்று வயதுச் சிறுவன் - முகத்தில் கீறல் காயங்களோடு வைத்தியசாலையில் அனுமதி..! யாழில் சம்பவம்
Jaffna
Sri Lanka
By Kiruththikan
கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட முன்பள்ளி நிலையம் ஒன்றில் ஆசிரியரால் தாக்கப்பட்ட மூன்று வயதுச் சிறுவன் யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
குறித்த ஆசிரியர் சிறுவர்களுக்கு கோலாட்டம் பழக்கியுள்ளார்.
இதன்போது சிறுவன் தவறிழைத்ததாக தெரிவித்து அவனை கோலாட்ட தடியால் அடித்துள்ளார்.
முகத்தில் கீறல் காயங்கள்
பின்னர் சிறுவனின் அழுகையை அடக்குவதற்கு முயற்சித்துள்ளார். இதனால் முகத்தில் கீறல் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட சிறுவன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் 36 வயதான ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்பாய் காவல்துறையினர் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி