இன அழிப்புக்கு சாட்சியாக அமைந்த கிருசாந்தியின் மரணம் : சிறீதரன் எம்.பி
சிங்கள பௌத்த பேரினவாதிகளால் இந்த மண்ணில் வெளிப்படையாக மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைக்கு கிருசாந்தியினுடைய மரணம் தான் ஒரு அங்கத்தை தொட்டு தந்தது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Shritharan) தெரிவித்துள்ளார்.
செம்மணியில் இன்று (07) நடைபெற்ற கிருசாந்தியின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த மண்ணிலே இப்பொழுதும் பொருளாக இருக்கின்ற நூற்றுக்கணக்கான எங்களுடைய சகோதரர்களின் எலும்புக்கூடுகளின் சாட்சியாக இந்த மண்ணிலே ஒன்று கூடியிருப்பது காலத்தின் கடமையாகும்.
இந்த மண்ணிலே சிங்கள பௌத்த பேரினவாதிகளால் வெளிப்படையாக மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைக்கு கிருசாந்தியினுடைய மரணம் தான் ஒரு அங்கத்தை தொட்டு தந்தது.
இன்றும் கூட கண்டெடுக்கப்படுகின்ற பல நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள் இருக்க வைத்த நிலையில் அல்லது கட்டிப்பிடடித்த நிலையில் எந்தவொரு அடையாளமும் இல்லாமல் அவர்களுடைய இதயப் பகுதிகள் மண்டையோட்டுப் பகுதிகள் அடித்து நொருக்கப்பட்ட எலும்புக்கூடுகளை இந்த இடத்தில் பார்க்கின்றோம்.
இந்தநிலையில் கிருசாந்தியினுடைய மரணமும் எங்களுக்கான விடுதலைப் பாதையில் ஒரு மைல்கல்.
கிருசாந்தியோடும் அவருக்கு முற்பாடும் பிற்பாடும் இந்த மண்ணிலே கொல்லப்பட்ட பலருடைய ஆத்மாக்கள் தமிழ் தேசிய விடுதலைப் பயணத்தில் ஒரு பாதையை திறக்கும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
