அரசுக்கு எதிராக நாளை பாரிய வேலை நிறுத்தப் போராட்டங்கள் - ஆசிரியர் சங்கமும் போராட்டத்தில்
அரசாங்கத்திற்கு எதிராக நாளை பல தொழிற்சங்கங்களின் பங்குபற்றுதலுடன் பாரிய வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
அரசு பதவி விலகக் கோரி 100க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.
அரசு, பொது மற்றும் பெருந்தோட்டத் துறைகளின் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன.
இவற்றைவிட, அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம் அரசாங்கத்திற்கு எதிராக நாளை ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளது.
2,40,000 ஆசிரியர்கள் மற்றும் 16,000 அதிபர்களின் பங்கேற்புடன் இந்த பணிப்புறக்கணிப்பு நடத்தப்படும் என ஒன்றியத்தின் தலைவர் வணக்கத்துக்குரிய யல்வெல பன்யசேகர தேரர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து, பதவி விலகி, பொதுமக்களுக்கு உகந்த அரசை அமைக்கக் கோரி இந்த போராட்டம் நடத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிராக வேலைநிறுத்தம் செய்ய சுகயீன விடுப்புப் பிரச்சாரத்தை அரசாங்க நிர்வாக அதிகாரிகளின் குழு அறிவித்துள்ளது.
இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நாளை காலை கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கு முன்பாக நடைபெறவுள்ளது.
பொதுமக்களின் கருத்துக்கு மதிப்பளித்து, அரசை பதவி விலகக் கோரி குறித்த வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என அரசு நிர்வாக அலுவலர்கள் கூட்டுக் குழு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்பு 300 வது Episode சிறப்பு நேரலை