நாட்டில் லிஸ்டீரியா தொற்றுப் பரவல் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவுறுத்தல்!
நாட்டில் லிஸ்டீரியா (Listeria – Listeriosis) நோய்த் தொற்று பரவுவதற்கான அபாயம் இல்லை எனவும், மக்கள் தேவையற்ற விதத்தில் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவுறுத்தலை தொற்று நோயியல் பிரிவு மற்றும் சுகாதார அமைச்சு என்பவை வழங்கியுள்ளன.
சிவனொளிபாத மலைக்கு பாதை யாத்திரை சென்ற பெண் ஒருவர் குறித்த நோய்த்தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்ததாக ஊடகங்களில் வெளியாகிய செய்தி தொடர்பில் சுகாதார அமைச்சு குறித்த அறிவிப்பை விடுத்துள்ளது.
மருத்துவர்கள்
உயிரிழந்த பெண்ணின் இறப்புக்கு லிஸ்டீரியா நோய் காரணம் என இன்னும் உறுதி செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், லிஸ்டீரியா பக்டீரியா அறிகுறிகளாக காய்ச்சல், வாந்தி, தலைவலி, வயிற்றுப்போக்கு போன்றவை கூறப்படுவதுடன், அசுத்தமான உணவின் மூலம் உடலில் பரவும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.