மீண்டும் இந்தியாவிடம் கடன் - பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது இலங்கை!
Sri Lanka Economic Crisis
Government Of Sri Lanka
Government Of India
Dollars
By Pakirathan
இலங்கை மீண்டும் இந்தியாவிடமிருந்து சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை, இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும் மூத்த பொருளியல் நிபுணருமான கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கி ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் குறித்த விடயத்தை கூறியுள்ளார்.
கடன் பெறுமதி
குறித்த கடன் தொகையானது இந்திய ரூபாவில் பெறப்படும் எனவும், சரியான பெறுமதி இன்னும் முடிவாகவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணளவாக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடனாக இருக்கும் எனவும், இது இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான வர்த்தகத்துக்கு பயன்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி