ஊரடங்கால் 3,447 மில்லியன் ரூபா நட்டம் - இலங்கை புகையிரத சேவை, போக்குவரத்துச் சபை ஆகியன வெளியிட்ட தகவல்
தற்போது நடைமுறையிலுள்ள ஊரடங்குச் சட்டம் காரணமாக இலங்கை புகையிரத சேவை மற்றும் இலங்கை போக்குவரத்து சபை என்பனவற்றுக்கு 3,447 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாளாந்தம் முன்னெடுக்கப்படும் பயணங்கள் தடைப்பட்டுள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி நள்ளிரவு முதல் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பயணிகள் இன்மையால், புகையிரத திணைக்களத்திற்கு நாளாந்தம் 16.6 மில்லியன் ரூபா வருமானம் இல்லாமல் போயுள்ளது.
அதன்பிரகாரம் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் 597.6 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் நாளாந்தம் 80 மில்லியன் ரூபா இலங்கை போக்குவரத்து சபையினால் ஈட்டப்பட்ட நிலையில் அந்த வருமானம் தற்போது இல்லாமல் போயுள்ளது.
மேலும் ஊரடங்குச் சட்ட காலப்பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு 2, 880 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடு மீள திறக்கப்பட்ட பின்னர் உடனடியாக சேவைகளை முன்னெடுக்க தயாராகவுள்ளதாக புகையிரத திணைக்களம் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை என்பவற்றின் சிரேஸ்ட பேச்சாளர்கள் தெரிவித்துள்ளனர்.