இனவாத பிரச்சினைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம்: தனிப்பட்ட தேவைகளுக்காகவே இவ்வாறு செயற்படுகிறார்கள் என்கிறார் கெமுனு விஜேரத்ன

Tamils Sri Lanka Sri Lanka Final War LTTE Leader
By pavan Oct 03, 2023 11:02 AM GMT
Report

இலங்கையில் கடந்த 1983 ஆம் ஆண்டு தொடங்கிய இனவாத பிரச்சனைகளை சில அரசியல்வாதிகள் தமது தனிப்பட்ட தேவைகளுக்காக தொடர்ந்தும் முன்னெடுப்பதாக இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குற்றம் சாட்டியுள்ளார். 

தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கிடையில் இருந்த ஒற்றுமை தற்போது இல்லாமல் போயுள்ளமைக்கும் இனவாத நோக்கத்துடன் செயல்படும் சில அரசியல்வாதிகளே காரணமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐபிசி தமிழ் ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியோக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மற்றும் கிழக்கு வாழ் மக்களை நான் மதிக்கிறேன்.

யாழ். மாவட்ட நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு

யாழ். மாவட்ட நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு

தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நான் மதிக்கிறேன். அவர் மற்றும் அவரது உறவினர் ஒருவருடன் நான் நெருங்கி செயல்பட்டுள்ளேன்.

இவர்களுடன் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தை நான் முழுமையாக எதிர்ப்பதோடு, அவர் உயிரிழந்ததை நினைத்து நான் மிகவும் கவலையடைகிறேன்.

இனவாத பிரச்சினைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம்: தனிப்பட்ட தேவைகளுக்காகவே இவ்வாறு செயற்படுகிறார்கள் என்கிறார் கெமுனு விஜேரத்ன | Ltte Rule For Tamil Eelam Prabhakaran Gemunu Said

அவர் மிக சிறந்த வகையில் வடக்கு - கிழக்கில் தமது ஆட்சியை முன்னெடுத்திருந்தார். அவரால் இலங்கையை முழுமையாக ஆட்சி செய்திருக்க முடியும். அவர் அந்த திறமையை கொண்டிருந்தார்.

நீதிபதி சரவணராஜா பதவி விலகல் : இலங்கைக்கு ஏற்படப்போகும் ஆபத்து

நீதிபதி சரவணராஜா பதவி விலகல் : இலங்கைக்கு ஏற்படப்போகும் ஆபத்து

அவரை கொன்றது தவறான காரியம்

அவர் உயிருடன் இருந்த காலப்பகுதியில் வடக்கு கிழக்கில் யாசகர்கள் இருக்கவில்லை. திருட்டு சம்பவங்களும் இடம்பெறவில்லை. பெண்கள் இரவிலும் சுதந்திரமாக நடமாடக்கூடிய சூழ்நிலையை அவர் உருவாக்கியிருந்தார்.

சிறந்த ஆட்சி முறையை அவர் பின்பற்றியிருந்தார். இப்படிப்பட்ட ஒரு தலைவரை கொன்றது தவறான காரியம். சமாதானமான முறையில் அவருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்கலாம்.

இனவாத பிரச்சினைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம்: தனிப்பட்ட தேவைகளுக்காகவே இவ்வாறு செயற்படுகிறார்கள் என்கிறார் கெமுனு விஜேரத்ன | Ltte Rule For Tamil Eelam Prabhakaran Gemunu Said

இனவாதத்தை நான் முழுமையாக எதிர்க்கிறேன். இனவாதத்தை சிலர் துஷ்பிரயோகப்படுத்துகிறார்கள். இலங்கையில் உள்ள சிங்கள அரசியல்வாதிகள் நாட்டை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க மாட்டர்கள். அதனை தமிழ் அரசியல்வாதிகளும் செய்ய மாட்டார்கள். இரு தரப்பினரும் இனவாத கருத்துக்களை பேசிக் கொண்டிருப்பார்கள்.

சிறிலங்காவை மோசமான நாடாக சித்தரிக்காதீர்கள்: ரணில் சீற்றம் (காணொளி)

சிறிலங்காவை மோசமான நாடாக சித்தரிக்காதீர்கள்: ரணில் சீற்றம் (காணொளி)

புலம்பெயர் தமிழர்கள்

இந்த நிலையில், வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் இலங்கையில் முதலீடுளை மேற்கொள்ள ஆயத்தமாக இருக்கிறார்கள்.

வடக்கு மற்றும் கிழக்கை அபிவிருத்தி செய்ய அவர்கள் ஆயத்தமாக இருக்கிறார்கள். எனினும், அதற்கான வாய்ப்புக்கள் மிக குறைவாகவே உள்ளது. சில அரசியல்வாதிகள் இதற்கு காரணமாக இருக்கிறார்கள்.

இனவாத பிரச்சினைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம்: தனிப்பட்ட தேவைகளுக்காகவே இவ்வாறு செயற்படுகிறார்கள் என்கிறார் கெமுனு விஜேரத்ன | Ltte Rule For Tamil Eelam Prabhakaran Gemunu Said

அரசாங்கம் புலம்பெயர்ந்தவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டிய காலம் வந்து விட்டது. இல்லாவிடின், இலங்கை எதிர்வரும் நாட்களில் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும்.

வடக்கு மற்றும் கிழக்கு வாழ் மக்கள் இலங்கையர்களாக அனைவருடனும் ஒன்றினைந்து வாழ ஆசைப்படுகிறார்கள். இதனை புரிந்து அனைவரும் செயல்படுவதன் மூலம் இலங்கை பாரிய அபிவிருத்தியடைந்த நாடாக மாறும் என குறிப்பிட்டுள்ளார்.


YOU MAY LIKE THIS 


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், கோப்பாய், Katunayake, Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, தெஹிவளை

15 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பரந்தன், துன்னாலை, திக்கம்

16 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Birmingham, United Kingdom

07 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Paris, France

11 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

15 Apr, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Herne, Germany, Datteln, Germany

12 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024