விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் தென்னிலங்கையில்: சர்ச்சையை கிளப்பும் TID விசாரணை

Sri Lanka Sri Lanka Police Investigation Law and Order
By Raghav Jul 31, 2025 07:03 AM GMT
Report

தென்னிலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்களுக்கு வடக்கில் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றது என சந்தேகம் நிலவுவதாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு (TID) தெரிவித்துள்ளது.

மேலும், அது குறித்து மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு (TID),கொழும்பு  மேலதிக நீதவான் பசன் அமரசேனவிடம் தெரிவித்துள்ளது.

அண்மையில், வவுனியாவில் மீட்கப்பட்ட 86 கைக்குண்டுகள், 321 T-56 வகை துப்பாக்கி ரவைகள் மற்றும், 5,600 கிராம் வெடிமருந்துகளுடன் கைது செய்யப்பட்ட நபர் உட்பட வவுனியா பகுதியைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் மூன்று சந்தேக நபர்களையும் 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி கோரி உள்ளதாகவும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

வவுனியா - நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த காரியக்பெரும ரமேஷ், அந்தோணி பெர்னாண்டோ மற்றும் முகமது ராசிக் ஆகிய மூன்று சந்தேக நபர்களையும் இவ்வாறு தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் விசாரணை அதிகாரிகள் மன்றில் தெரிவித்தனர். 

யாழில் மற்றொரு பௌத்த மயமாக்கல்...! கந்தரோடையில் முளைக்கும் சட்டவிரோத கட்டடம்

யாழில் மற்றொரு பௌத்த மயமாக்கல்...! கந்தரோடையில் முளைக்கும் சட்டவிரோத கட்டடம்

காவல்துறை விசாரணை

மேலும் குறித்த சந்தேக நபர்கள் வவுனியா பிரதேச புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் தென்னிலங்கையில்: சர்ச்சையை கிளப்பும் TID விசாரணை | Ltte Weapons Are Being Used In The South

தென்னிலங்கையில், குற்ற செயல்கள் மேற்கொள்ள வவுனியா பகுதியிலிருந்து  T56 துப்பாக்கியுடன் வந்த ஒருவர் கடந்த 21ஆம் திகதி கிரிபத்கொட பகுதியில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாகவும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியது.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது வடக்கில் மறைத்து வைக்கப்பட்ட துப்பாக்கிகள் தெற்கில் செய்யப்பட்ட குற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்டதா?,

விவசாய நிலத்தில் வைரம்: ஒரே நாளில் லட்சாதிபதியான விவசாயி

விவசாய நிலத்தில் வைரம்: ஒரே நாளில் லட்சாதிபதியான விவசாயி

விசாரணை அதிகாரிகள்

தெற்கில் உள்ள பாதாள உலக செயற்பாட்டாளர்களுக்கு ஆயுதங்கள் விற்கப்பட்டு பணம் பெறப்பட்டதாக சந்தேகம் இருப்பதால், இது தொடர்பாக மூன்று சந்தேக நபர்களிடம் நீண்ட நேரம் விசாரிக்க வேண்டும் என்று விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் தென்னிலங்கையில்: சர்ச்சையை கிளப்பும் TID விசாரணை | Ltte Weapons Are Being Used In The South

தெற்கில் உள்ள பாதாள உலக செயற்பாட்டாளர்களுக்கு அத்தகைய ஆயுதங்கள் விற்கப்பட்டு பணம் பெறப்பட்டதா என்பது குறித்து நடத்தப்படும் விசாரணைகளுக்காக மூன்று சந்தேக நபர்களின் வங்கி பதிவுகளைப் பெற உத்தரவு பிறப்பிக்குமாறு அதிகாரிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட  சாட்சியங்களை கருத்தில் கொண்ட நீதிபதி, மூன்று சந்தேக நபர்களையும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்கவும், அவர்களின் வங்கிக் கணக்கு பதிவுகளை அழைக்கவும் புலனாய்வுப் பிரிவுக்கு அனுமதி வழங்கினார்.

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழக பாஜக துணைத் தலைவராக நடிகை குஷ்பூ நியமனம்

தமிழக பாஜக துணைத் தலைவராக நடிகை குஷ்பூ நியமனம்

குடும்பத்தோடு உயிரை மாய்த்த இலங்கை அரசியல்வாதி: வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்

குடும்பத்தோடு உயிரை மாய்த்த இலங்கை அரசியல்வாதி: வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுவில், அளவெட்டி தெற்கு

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026