விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் தென்னிலங்கையில்: சர்ச்சையை கிளப்பும் TID விசாரணை

Sri Lanka Sri Lanka Police Investigation Law and Order
By Raghav Jul 31, 2025 07:03 AM GMT
Report

தென்னிலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்களுக்கு வடக்கில் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றது என சந்தேகம் நிலவுவதாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு (TID) தெரிவித்துள்ளது.

மேலும், அது குறித்து மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு (TID),கொழும்பு  மேலதிக நீதவான் பசன் அமரசேனவிடம் தெரிவித்துள்ளது.

அண்மையில், வவுனியாவில் மீட்கப்பட்ட 86 கைக்குண்டுகள், 321 T-56 வகை துப்பாக்கி ரவைகள் மற்றும், 5,600 கிராம் வெடிமருந்துகளுடன் கைது செய்யப்பட்ட நபர் உட்பட வவுனியா பகுதியைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் மூன்று சந்தேக நபர்களையும் 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி கோரி உள்ளதாகவும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

வவுனியா - நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த காரியக்பெரும ரமேஷ், அந்தோணி பெர்னாண்டோ மற்றும் முகமது ராசிக் ஆகிய மூன்று சந்தேக நபர்களையும் இவ்வாறு தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் விசாரணை அதிகாரிகள் மன்றில் தெரிவித்தனர். 

யாழில் மற்றொரு பௌத்த மயமாக்கல்...! கந்தரோடையில் முளைக்கும் சட்டவிரோத கட்டடம்

யாழில் மற்றொரு பௌத்த மயமாக்கல்...! கந்தரோடையில் முளைக்கும் சட்டவிரோத கட்டடம்

காவல்துறை விசாரணை

மேலும் குறித்த சந்தேக நபர்கள் வவுனியா பிரதேச புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் தென்னிலங்கையில்: சர்ச்சையை கிளப்பும் TID விசாரணை | Ltte Weapons Are Being Used In The South

தென்னிலங்கையில், குற்ற செயல்கள் மேற்கொள்ள வவுனியா பகுதியிலிருந்து  T56 துப்பாக்கியுடன் வந்த ஒருவர் கடந்த 21ஆம் திகதி கிரிபத்கொட பகுதியில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாகவும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியது.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது வடக்கில் மறைத்து வைக்கப்பட்ட துப்பாக்கிகள் தெற்கில் செய்யப்பட்ட குற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்டதா?,

விவசாய நிலத்தில் வைரம்: ஒரே நாளில் லட்சாதிபதியான விவசாயி

விவசாய நிலத்தில் வைரம்: ஒரே நாளில் லட்சாதிபதியான விவசாயி

விசாரணை அதிகாரிகள்

தெற்கில் உள்ள பாதாள உலக செயற்பாட்டாளர்களுக்கு ஆயுதங்கள் விற்கப்பட்டு பணம் பெறப்பட்டதாக சந்தேகம் இருப்பதால், இது தொடர்பாக மூன்று சந்தேக நபர்களிடம் நீண்ட நேரம் விசாரிக்க வேண்டும் என்று விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் தென்னிலங்கையில்: சர்ச்சையை கிளப்பும் TID விசாரணை | Ltte Weapons Are Being Used In The South

தெற்கில் உள்ள பாதாள உலக செயற்பாட்டாளர்களுக்கு அத்தகைய ஆயுதங்கள் விற்கப்பட்டு பணம் பெறப்பட்டதா என்பது குறித்து நடத்தப்படும் விசாரணைகளுக்காக மூன்று சந்தேக நபர்களின் வங்கி பதிவுகளைப் பெற உத்தரவு பிறப்பிக்குமாறு அதிகாரிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட  சாட்சியங்களை கருத்தில் கொண்ட நீதிபதி, மூன்று சந்தேக நபர்களையும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்கவும், அவர்களின் வங்கிக் கணக்கு பதிவுகளை அழைக்கவும் புலனாய்வுப் பிரிவுக்கு அனுமதி வழங்கினார்.

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழக பாஜக துணைத் தலைவராக நடிகை குஷ்பூ நியமனம்

தமிழக பாஜக துணைத் தலைவராக நடிகை குஷ்பூ நியமனம்

குடும்பத்தோடு உயிரை மாய்த்த இலங்கை அரசியல்வாதி: வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்

குடும்பத்தோடு உயிரை மாய்த்த இலங்கை அரசியல்வாதி: வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Markham, Canada

10 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ottawa, Canada, Toronto, Canada

08 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், ஏழாலை, Bad Harzburg, Germany

10 Nov, 2025
16ம் நாள் அந்திரெட்டியும்(சொர்க்கவாசல்), நன்றி நவிலலும்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Bremen, Germany

10 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, பேர்ண், Switzerland

12 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரணவாய், கொழும்பு, London, United Kingdom

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025