உலகப்பரப்பை உணர்வுடன் கடந்த தேசிய மாவீரர் நினைவெழுச்சி - திரண்ட பல்லாயிரம் மக்கள்- நேரடி ரிப்போர்ட்
தமிழ் மக்களின் ஆன்மாவில் ஆழப்பதிந்துவிட்ட தேசிய நினைவெழுச்சி மாவீரர் நாள் நிகழ்வுகள் சற்றுமுன் ஆரம்பமானது.
முதல் மாவீரரான லெப்டினட் சங்கர் எனப்படும் சத்தியநாதனின் உயிர்ஈகம் செய்யப்பட்ட தாயக நேரம் மாலை 6 . 05இற்கு ஈகைச்சுடரேற்றும் நிகழ்வுடன் வணக்க நிகழ்வுகள் ஆரம்பித்துள்ளன.
மாவீரர் நாள் நிகழ்வுகள் நடத்தப்படும் இடங்களின் பதிவுகள் வருமாறு,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்



உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லம்


சாட்டி மாவீரர் துயிலும் இல்லம் ( யாழ் தீவகம்)



கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம்



கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்


விசுவமடு - தேராவில் மாவீரர் துயிலும் இல்லம்


முல்லைத்தீவு - அளம்பில் மாவீரா் துயிலுமில்லம் - முன்றல்



முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லம்



முல்லைத்தீவு நகர் கடற்கரை


வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்



இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லம்




எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்
யாழ்.வடமராட்சி - எள்ளங்குளம் மாவீரா் துயிலும் இல்லத்தில் அச்சுறுத்தல்களை தாண்டி பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டு மாவீரா்களுக்கான அஞ்சலி செலுத்தியுள்ளனா்.
வழக்கம்போல் 6 மணி 5 நிமிடத்திற்கு மணி ஒலிக்க பிரதான ஈகைச் சுடாினை மேஜா் சோதியா (சோதியா படையணி) அவா்களுடையt தாயாா் ஏற்றிவைத்தாா்.
தொடா்ந்து மாவீரா்களுக்கான பாடல் ஒலிக்க ஈகையோருக்கான ஈகைச் சுடா்கள் எற்றப்பட்டு கண்ணீா் மல்க பூக்கள் சொாிந்து அஞ்சலி செலுத்தப்பட்டது.




கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் - முன்றல்




நல்லூர் மாவீரர் நினைவாலயம்



யாழ் - நாவற்குழி
யாழ் - நாவற்குழியில் கடலில் காவியமான மாவீரர்களுக்கு பிரத்தியேகமாக கடற்பகுதியில் ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லம்




மன்னார் - பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லம்




வவுனியா நகரசபை மண்டபம்



திருகோணமலை - ஆலம்குளம் மாவீரர் துயிலும் இல்லம்



மட்டக்களப்பு - மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லம்



அம்பாறை - கஞ்சிகுடியாறு மாவீரர் துயிலும் இல்லம்



வவுனியா - ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்




களிக்காடு மாவீரர் துயிலும் இல்லம்


தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லம்


இலங்கை தமிழரசு கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வு


வடக்கு கிழக்கில் இம்முறை 30 இற்கும் மேற்பட்ட இடங்களில் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடத்தப்படும் நிலையில், அந்த இடங்களில் மாவீரர் பெற்றோர்கள் - உறவுகள், அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள உட்பட ஏராளமான மக்கள் ஒன்று கூடியுள்ளனர்.
வழமைபோலவே சிறிலங்கா பாதுகாப்புத் தரப்பின் அடாவடிகளும் ஒடுக்குமுறைகளும் ஆங்காங்கே இடம்பெற்ற போதிலும், அவற்றையெல்லாம் புறந்தள்ளி மக்கள் தமது தேசிய கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
உலகப் பரப்பின் நேரவலையத்தின் அடிப்படையில் ஏற்கனவே பசுபிக் பிராந்திய நாடுகளான நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் நிகழ்வுகள் உணர்வுபூர்வமான இடம்பெற்றுள்ளன. தாயக பகுதிகளில் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகளிலும் இடம்பெறவுள்ளன.