மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு குறித்து அமைச்சர் வெளியிட்ட தகவல்
மகாபொல புலமைப்பரிசில் நிதியத்திற்குச் சொந்தமான நிறுவனங்கள் கடந்த காலங்களில் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்பட்டது தொடர்பில் அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
இன்றைய (11) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய போதே அவர் இதனை வெளிப்படுத்தினார்.
அத்துடன் அந்த நேரத்தில் செய்யப்பட்ட தவறுகளை சரிசெய்வது மகாபொல நிதிக்கு பெரும் தொகையை மிச்சப்படுத்தும் எனவும் அவ்வாறு சேமிக்கப்படும் பணம் மகாபொல புலமைப்பரிசிலை அதிகரிக்கப் பயன்படுத்தப்படும் எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
முன்னாள் ஜனாதிபதிகள்
அத்துடன் மகாபொல புலமைப்பரிசில் நிதியத்தின் கீழ் உள்ள ஒரு நிறுவனமான SLIIT நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பாக முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena), ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe), மற்றும் நல்லாட்சி அரசாங்கத்தின் முழு அமைச்சரவையும் கடும் கோபத்தில் உள்ளதாக வசந்த சமரசிங்க குறிப்பிட்டார்.
மகாபொல புலமைப்பரிசில் நிதியத்திலிருந்து SLIIT நிறுவனத்தை பிரித்து வரையறுக்கப்பட்ட நிறுவனமாக மாற்றியதில் நல்லாட்சி அரசாங்கத்தின் முழு அமைச்சரவையும் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் (Sajith Premadasa) இந்த மோசடிக்கு பொறுப்பானவர் எனவும் அவர் நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் உறுப்பினராகவும் இருந்தார் என்று அமைச்சர் தெரிவி்ததமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
