விசேட அறிவிப்பின் பின்னர் பதவி விலகும் மகிந்த!! - வெளியான தகவல்
பிரதமர் மகிந்த ராஜபக்ச விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு தனது பதவியை இராஜினாமா செய்வார் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர்,
"கட்சியும் ஆட்சியும் என்ன செய்கிறது என்று எனக்கு இன்னும் தெரியவில்லை. தேசிய ஒருமித்த கருத்துடன் இந்த நெருக்கடியை சமாளிக்க நாம் உழைக்க வேண்டும். பிரச்சினைகளை தனியாக தீர்க்க முடியாது.
நாம் ஒன்றுபட்டால் தான் எரிவாயு, மின்சாரம், எரிபொருள் வழங்க முடியும்.
தவறுகளை நினைக்காமல் பதவியை துறக்க வேண்டும் என்று மக்கள் கூறினால் விட்டுக்கொடுத்து முன்னேற வேண்டும்.
மக்கள் மற்றும் மகாநாயக்க தேரர்களின் கருத்தில் நாங்கள் இருக்கின்றோம். நாட்டைக் காப்பாற்ற மக்கள் ஒன்றிணைந்து முடிவெடுக்க வேண்டும்", எனக் குறிப்பிட்டார்.