இலங்கை அரகலய சதுரங்கத்தில் மகிந்தவின் அரசியலை உருமாற்றிய 121 நாட்கள்

Gota Go Home 2022 Rajapaksa Family Gota Go Gama
By Dharu Jul 09, 2026 06:44 AM GMT
Report

இன்றுடன் நான்குஆண்டுகளுக்கு முன்பு, 2022 மே 9 ஆம் திகதி அதிகாலை, அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது குடும்ப உறுப்பினர்கள் சிலருடன் கடுமையான இராணுவப் பாதுகாப்பின் கீழ் அலரிமாளிகையை விட்டு வெளியேறினார்.

காரணம், அவருக்கு எதிராகக் கொந்தளித்துக் கொண்டிருந்த எதிர்ப்பாளர்கள் எந்த நேரத்திலும் அலரிமாளிகைக்குள் நுழையக்கூடும் என்ற அச்சம் இருந்தது.

GotaGoHome என்ற போராட்டம் அதன்பின்னர் "மக்கள் போராட்டம்" என்று அழைக்கப்பட்டது. ஆனால் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பிறகு "மக்கள்" என்ற சொல் மறைந்து, இன்று பேசப்படும் வன்முறைச் சார்ந்த "அரகலய" (Aragalaya) என்ற போராட்டமாக அது மாறியது.

நிபந்தனைகளுடன் கோட்டா கோ கம போராட்டக்காரருக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க அழைப்பு!

நிபந்தனைகளுடன் கோட்டா கோ கம போராட்டக்காரருக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க அழைப்பு!

மகிந்த ராஜபக்ச 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருந்து அகற்றப்பட்டதும் அந்த போராட்டத்தின் விளைவாகவே. ஜூலை 9 அன்று அவர் ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேறினாலும், தனது பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டது ஜூலை 14 அன்று.

இந்தப் போராட்டத்தின் மிக முக்கியமான அரசியல் நிகழ்வு கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்றப்பட்டதல்ல. மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதே.

இந்த விளக்கத்தை சில தென்னிலங்கை எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர்களின் விளக்கங்கள் மூலம் இந்த கட்டுரையினூடாக விளக்குகின்றேன்.

2021ஆம் ஆண்டின் இறுதியில் கொழும்பைச் சேர்ந்த ஆங்கிலம் பேசும் நடுத்தர வர்க்கப் பெண்கள் சிலர் எரிபொருள் பற்றாக்குறைக்கு தீர்வு கோரி நெலும் பொகுண மற்றும் சுதந்திரச் சதுக்கத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பலகைகளை ஏந்தி நடத்திய ஆர்ப்பாட்டத்திலிருந்தே இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.

அந்த நேரத்திலேயே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மிகுந்த தோல்வியடைந்த ஆட்சியாளர் என்ற கருத்து சமூகத்தின் பெரும்பான்மையினரிடையே உருவாகியிருந்தது.

2019 நவம்பர் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் அழைக்கப்படுவதற்கு முன்பு, அதே ஆண்டு ஜூன் மாதத்தில், அஸ்கிரிய மகா விகாரையின் துணை மகாநாயகர் வெடருவே உபாலி தேரர், நாட்டின் தலைவராக கோட்டாபய ராஜபக்ச வர வேண்டும் என்று கூறினார்.

நாட்டிற்கு ஹிட்லரைப் போன்ற கடுமையான சிங்கள - பௌத்த தலைமையே தேவை என்று அவர் தனது கருத்தை நியாயப்படுத்தினார். ஆனால், ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்தே கோட்டாபய ராஜபக்ச தோல்வியடைந்தார்.

கோட்டாபய குழப்பம்! ஓகஸ்ட் 9 புரட்சி திட்டம்! பொன்சேகா ஆட்சிக்கு குறி..!

கோட்டாபய குழப்பம்! ஓகஸ்ட் 9 புரட்சி திட்டம்! பொன்சேகா ஆட்சிக்கு குறி..!

ஹிட்லர் போன்ற தலைமை

வெடருவே உபாலி தேரர் எதிர்பார்த்த ஹிட்லர் போன்ற தலைமை அவரிடமிருந்து வெளிப்படவில்லை. ஆறு மாதங்கள் கூட ஆகும் முன்பே, அவர் ஒரு நகைச்சுவைப் பாத்திரமாக மாறியதாக சமூகத்தில் விமர்சனங்கள் பரவின. "Sir Fail" என்ற பெயரும் அவருக்கு சூட்டப்பட்டது.

எரிபொருள் பற்றாக்குறை, அவரது ஆட்சியின் தோல்வியால் ஏற்பட்டது என்ற பொதுவான கருத்து நிலவியது. எரிபொருள் தட்டுப்பாட்டால் மின்வெட்டும் ஏற்பட்டதால், 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் கோட்டாபய எதிர்ப்பு, முழு அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பாக மாறத் தொடங்கியது.

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக "Gota Go Home" என்ற ஆங்கில முழக்கம், கொழும்பு நடுத்தர வர்க்கத்தினரின் ஆதரவுடன் நடைபெற்ற போராட்டங்களில் ஒலிக்கத் தொடங்கியது.

2022 ஏப்ரல் 9ஆம் திகதி காலி முகத்திடலில் ஒன்று கூடுமாறு சமூக ஊடகங்கள் வழியாக அழைப்பு விடுக்கப்பட்டபோது, "Gota Go Home" என்ற முழக்கமே அதன் மையக் கோஷமாக இருந்தது. அதன் ஒரே நோக்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியை விட்டு விலக வேண்டும் என்பதாக சமூகத்தில் புரிதல் உருவாக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்திற்கு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைமையில்லை. கோட்டாபய ராஜபக்ச பதவி விலகிய பிறகு நாட்டின் ஆட்சி எவ்வாறு முன்னெடுக்கப்படும் என்பது பற்றியும் யாரும் தெளிவாக விளக்கவில்லை.

ஆனால், கொழும்பைச் சேர்ந்த கல்வியறிவு மிக்க நடுத்தர வர்க்கத்தினர், இந்தக் காலி முகத்திடல் போராட்டம் வெறும் ஒருவருக்கு எதிரானது அல்ல. நாட்டின் முழு அரசியல் அமைப்பையும் அரசியல் கலாசாரத்தையும் மாற்ற வேண்டும் என்ற இளைஞர்களின் விருப்பத்தை பிரதிபலிக்கிறது என்று கூறினர்.

அதனுடன் "System Change" (அமைப்பு மாற்றம்) என்ற சொல் பரவலாகப் பயன்படுத்தப்படத் தொடங்கியது. அதே நேரத்தில், அவுஸ்திரேலியாவில் இருந்து அவசரமாக அழைக்கப்பட்ட நந்தலால் வீரசிங்க இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

அவர் 2022 ஏப்ரல் 12ஆம் திகதி, இலங்கை பொருளாதார ரீதியாக திவாலான நாடாகிவிட்டது என்று அறிவித்தார். அதன் பின்னர், சர்வதேச அளவிலும் இலங்கை நம்பகத்தன்மையை இழந்தது.

இலங்கை திரும்பியதும் கோட்டாபயவுக்கு காத்திருக்கும் நெருக்கடி..! வெளியான உள்ளக தகவல்கள்

இலங்கை திரும்பியதும் கோட்டாபயவுக்கு காத்திருக்கும் நெருக்கடி..! வெளியான உள்ளக தகவல்கள்

Maina Go Hom

இந்த பொருளாதார நெருக்கடிக்கான முழுப் பொறுப்பும் ராஜபக்ச குடும்பத்தின் மீது சுமத்தப்பட்டது. ஆனால், காலி முகத்திடலில் நடைபெற்ற "Gota Go Home" போராட்டம் அமைதியான, கலாசார நிகழ்வுகளை மையமாகக் கொண்ட ஒரு மக்கள் திருவிழா போன்ற தோற்றத்தைப் பெறத் தொடங்கியதால், அதன் அரசியல் நோக்கம் படிப்படியாக மங்கத் தொடங்கியது.

அதன் காரணமாக, யாரோ ஒருவர் அல்லது ஒரு குழு, ராஜபக்ச எதிர்ப்பை மேலும் தீவிரப்படுத்தும் நோக்கில், பிரதமர் மகிந்த ராஜபக்சவை நேரடியாக இலக்காகக் கொண்ட மற்றொரு போராட்டத்தை அலரிமாளிகை முன்பாக உள்ள காலி வீதியில் அமர்வு போராட்டமாக ஆரம்பித்தனர்.

ராஜபக்ச எதிர்ப்பு, மகிந்த ராஜபக்சவை குறிவைக்கும் போது அதிக கவனத்தைப் பெறும் என்று கருதிய அவர்கள், "Maina Go Home" என்ற புதிய முழக்கத்தையும் அறிமுகப்படுத்தினர்.

காலி முகத்திடல் போராட்டம் ஆரம்பிப்பதற்கு பல மாதங்களுக்கு முன்பே, கோட்டாபய ராஜபக்சவை மட்டுமே குறிவைத்து நடைபெற்ற போராட்டம் திடீரென மகிந்த ராஜபக்சவை நோக்கித் திருப்பப்பட்டது ஏன்? அதை யார் செய்தார்கள்? என்ற கேள்விகளுக்கு எங்கும் தெளிவான விளக்கம் இல்லை.

ஆனால் இதற்கு ஒரு தெளிவான அரசியல் காரணம் இருந்தது. மகிந்த ராஜபக்ச பிரதமராக இருந்தபடியே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியை இழந்திருந்தால், அப்போது நடைமுறையில் இருந்த அரசியலமைப்பின்படி, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருந்த காரணத்தால் மகிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வாய்ப்பு இருந்தது.

2020 நாடாளுமன்றத் தேர்தலில், பொதுஜன பெரமுன 145 உறுப்பினர்களுடன் பெரும்பான்மை அரசை அமைத்திருந்தது. எனவே ஜனாதிபதி பதவி காலியாகியிருந்தால், அந்த பெரும்பான்மை வாக்குகளால் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக வர முடியும் என்பது அரசியல் யதார்த்தமாக இருந்தது.

அதனால், "Gota Go Home" போராட்டத்தின் பின்னால் இருந்த திட்டமிடுபவர்கள், கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து அகற்றுவதற்கு முன், மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் இருந்து அகற்றி, அவருக்குப் பதிலாக தங்களுக்கு ஏற்ற நம்பகமான ஒருவரை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று நினைத்திருக்க கூடும்.

கோட்டாபய வெளியேறும் வரை அங்கேயே தங்கியிருப்போம்! அதிரடி காணும் போராட்டக்களம்

கோட்டாபய வெளியேறும் வரை அங்கேயே தங்கியிருப்போம்! அதிரடி காணும் போராட்டக்களம்

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக 

காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களோ, இளைஞர்களோ இந்த அரசியல் கணக்கீட்டை அறிந்திருக்கவில்லை. ஆனால், 2022 மே 9ஆம் திகதி அதிகாலையில் மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் இருந்து விலகச் செய்வதில் அவர்கள் அறியாமலேயே செயலில் பங்கேற்றனர்.

மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகிய பிறகு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்த பிரதமரை நியமிப்பதில் வழக்கமான நாடாளுமன்ற நடைமுறையைப் பின்பற்றவில்லை.

பொதுவாக, ஆட்சிக் கூட்டணியில் பெரும்பான்மை ஆதரவு பெற்ற கட்சியிலிருந்து ஒருவரை பிரதமராக அழைக்க வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை அழைத்து பிரதமர் பதவியை ஏற்குமாறு கேட்கப்பட்டது.

சஜித் பிரேமதாச, குறைந்த எண்ணிக்கையிலான எம்.பிக்களுடன் அத்தகைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்க விரும்பவில்லை என்றும், அதனால் அந்த அழைப்பை ஏற்கவில்லை.

அதன்பின், நாடாளுமன்றத்தில் தனிப்பட்ட உறுப்பினராக இருந்த ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டதே இலங்கை அரசியலின் மிக முக்கிய பேசுபொருளானது. இது திடீரென நடந்த முடிவு அல்ல.

முன்கூட்டியே திட்டமிடப்பட்ட அரசியல் ஏற்பாட்டின் ஒரு பகுதியாக இருக்கலாம். மேலும், ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்ற உடனேயே அமெரிக்கத் தூதர் ஜூலி சங் வாழ்த்து தெரிவித்ததையும், சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) இணைந்து செயல்பட ஆதரவு தெரிவித்ததையும் அப்போதைய செய்திகளின் முக்கியத்துவம் மிக்க ஆவணங்களாகின.

வரலாற்றை புரட்டிப்போட்ட மக்கள் புரட்சி! சர்வதேசத்திலும் பலத்த அதிர்வு

வரலாற்றை புரட்டிப்போட்ட மக்கள் புரட்சி! சர்வதேசத்திலும் பலத்த அதிர்வு

நம்பிக்கையில்லாத் தீர்மானம் 

சில நாட்களுக்குப் பிறகு அவர் ஜே.வி.பி. தலைமையகத்துக்குச் சென்று அநுர குமார திஸாநாயக்க மற்றும் விஜித ஹேரத்துடன் சந்தித்ததையும் குறிப்பிடுகிறார். இந்த நிகழ்வுகளை வைத்து, அரசியல் மாற்றம் குறித்து பல கேள்விகள் எழுப்பக்கூடும். ஆனால் இவை சில அரசியல் ஆய்வாளர்களின் விளக்கங்களே தவிர உறுதிப்படுத்தப்பட்டவையாக தெரியவில்லை.

போராட்டத்தின் செயற்பாட்டாளர்களுக்கோ, கொழும்பின் நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளுக்கோ, சமூக செயற்பாட்டாளர்களுக்கோ, பிரதமராக நியமிக்கப்பட்டிருந்த விக்கிரமசிங்க, கோட்டாபயவுக்குப் பிறகு ஜனாதிபதியாகத் திட்டமிட்டிருந்தார் என்பதும், இதற்காக ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்திருந்தார் என்பதும் தெரிந்திருக்கவில்லை.

ராஜபக்சவுக்கு எதிரான அவர்களின் போராட்டம் காலி முகத்திடலுக்கு பின்னர் கொழும்பின் வீதிகளுக்கும் ஒரு போராட்டமாக வந்தபோதிலும், அரசாட்சியில் ஏற்பட்ட மாற்றங்கள் அவர்களால் தீர்மானிக்கப்படவில்லை என்பது 2022 ஜூலை மாத இறுதிக்கு முன்பே தெரிந்தது.

மேலும், போராட்டத்தை திட்டமிட்டவர்களுடன் ரணில் ஆரம்பத்திலிருந்தே நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தார் என்பதும் பொய்யல்ல. மே 12 ஆம் திகதி மாலையில் கோட்டாபயவால் ரணில் விக்ரமசிங்க பிரதமராகப் பதவியேற்ற பின்னரே அந்தத் தகவல் வெளிப்பட்டது.

அதற்குள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளரும் யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன், ஜனாதிபதி கோட்டாபய நாட்டின் பொருளாதாரத்தை அழித்துவிட்டதாகக் குற்றம் சாட்டி, அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரத் தயாராகியிருந்தார்.

கோட்டாபயவுக்கு எதிராக களமிறங்கிய காவல்துறை: வலுப்பெறும் போராட்டம்

கோட்டாபயவுக்கு எதிராக களமிறங்கிய காவல்துறை: வலுப்பெறும் போராட்டம்

அரசியலமைப்பில் ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு

அத்தீர்மானத்தை நிறைவேற்றுவதால் ஜனாதிபதியைப் பதவியிலிருந்து நீக்க முடியாது. ஆனால், அவருக்கு எதிரான மக்கள் எதிர்ப்பின் காரணமாக, ஜனாதிபதிக்கு இனி பதவியில் நீடிப்பதற்கான தார்மீக உரிமை இல்லை என்பதை நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ளும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மே 17 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடியபோது, ​​அதனை ஒரு சிறப்புத் தீர்மானமாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி முன்மொழிந்தது. புதிய பிரதமர் தலைமையிலான ஆளும் கட்சி, அத்தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது.

தான் கொண்டுவரத் திட்டமிட்டிருந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து விரிவாகப் பேசிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், பிரதமர் பதவிக்காகத் தனது கொள்கைகளைப் பகிரங்கமாகக் காட்டிக்கொடுத்த விக்ரமசிங்க, எதிர்க்கட்சியில் இருந்தபோது இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்திருந்தார் என்று அன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஏப்ரல் மாதத்திற்கு முன்பிருந்தே ஏற்பாடு செய்யப்பட்டு, பின்னர் 'போராட்டமாக' மாறிய GOTA GO GAMA போராட்டம் என்பது, ராஜபக்சவுக்கு எதிரான ஒரு போராட்டம் மட்டுமல்ல, அது ரணில் முன்னின்று நடத்திய அரசியலமைப்பில் உள்ள இடத்தைப் பயன்படுத்திய ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு ஆகும்.

விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்குவதற்கு அவசியமான முதல் முடிவு, கோட்டாபயவை ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்குவது அல்ல, மாறாக மகிந்த ராஜபக்ச பிரதமர் அலுவலகத்திலிருந்து நீக்குவதே ஆகும்.       

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி