மைத்திரி தலைமையில் ஆட்சி அமைக்க அணிதிரளுங்கள் - தயாசிறி அறைகூவல்
Dayasiri Jayasekara
Maithripala Sirisena
SriLanka
SriLanka Freedom Party
By Chanakyan
முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறசேனவின் (Maithripala Sirisena) தலைமையில் இலங்கை சுதந்திரக் கட்சியின் அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கு கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
பலவீனமடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப 2015ஆம் ஆண்டு தனக்கு கிடைத்த அதிகாரத்தை கைவிட்ட முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவை (Maithripala Sirisena) மீண்டும் தெரிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயம் ஆகியவற்றுக்கு தேவையான நிலையான கொள்கையோடு புதிய வேலைத்திட்டத்தை வகுத்து அதன்படி பயணிக்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.