வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபர் கைது
Sri Lanka
Hatton
By Beulah
ஹட்டன் காவல்துறை பிரிவிற்குட்பட்ட தரவளை தோட்டத்தில் கஞ்சா செடியை வளர்த்த சந்தேக நபர் ஒருவரை, ஹட்டன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஹட்டன் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, குறித்த சந்தேக நபரின் வீட்டுப் பகுதியை சுற்றி வளைத்த காவல்துறையினர், அங்கு தேடுதலில் ஈடுப்பட்ட போது பூந்தோட்டத்தில் வளர்க்கப்பட்ட இரண்டரை அடி உயரமான ஒரு கஞ்சா செடியை கண்டுப்பிடித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள்

இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு சந்தேகநபரை ஹட்டன் நீதவானிடம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி