மட்டக்களப்பில் தொடருந்தில் மோதி இளைஞன் உயிரிழப்பு
மட்டக்களப்பில் (Batticaloa) தொடருந்தில் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் (10.08.2025) இடம் பெற்றுள்ளது.
விபத்தில் மட்டக்களப்பு ஊறணியைச் சேர்ந்த 23 வயதுடைய நாகேந்திரன் கரிகரராஜ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
குறித்த நபர் மனைவியுடன் ஏற்பட்ட சண்டையினையடுத்து சம்பவதினமான நேற்று இரவு தண்டவாளத்தில் நின்று கொண்டு மனைவியுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்துள்ளார்.
இந்த நிலையில் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பிரயாணித்த தொடருந்து குறித்த நபர் மீது மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து சடலத்தை மீட்டு ஏறாவூர் தொடருந்து நிலையத்தில் ஒப்படைத்து விட்டு தொடருந்து கொழும்பு நோக்கி பிரயாணித்துள்ளது.
இது தொடர்பாக ஏறாவூர் மற்றும் கொக்குவில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 3 நாட்கள் முன்
