யாழில் கல்சியம் நீக்கி திரவத்தை அருந்தியவருக்கு நேர்ந்த துயரம்
Jaffna
Jaffna Teaching Hospital
By Sumithiran
யாழ்ப்பாணத்தில்(jaffna) கல்சியம் நீக்கி திரவத்தை அருந்திய நபர் ஒருவர் இன்றையதினம்(08) யாழ்ப்பணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
கச்சாய் தெற்கு, கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த பேரம்பலம் யோகேஷ்வரன் (வயது 64) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதி
குறித்த நபர் நேற்றையதினம் அவரது வீட்டில் இருந்த கல்சியம் நீக்கிய திரவத்தை அருந்தியுள்ளார். இதனையடுத்து அவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாய பிறேம்குமார் மேற்கொண்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
5 நாட்கள் முன்
ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே…
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்