காவல் நிலைய சிறைக்கூடத்தில் ஆண் ஒருவர் உயிரிழப்பு
கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆண் ஒருவர் காவல் நிலைய சிறையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று சனிக்கிழமை (23) அதிகாலையில் மட்டக்களப்பு கரடியனாறு காவல்நிலைய சிறையில் இடம் பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கித்துள் பாடசாலை வீதியைச் சேர்ந்த 50 வயதுடைய சுப்பையா சாந்தகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
குறித்த காவல் நியை காவல்துறையினரால் நேற்று வெள்ளிக்கிழமை (22) இரவு 8.00 மணியளவில் 1500 மில்லிலீற்றர் சட்டவிரோத கசிப்புடன் கைது செய்யப்பட்டு காவல் நிலைய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சம்பவ தினமான இன்று சனிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் உடல் நலக்குறைவால் சிறைக்கூடத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்காக நீதிமன்ற உத்தவை பெறும் நடவடிக்கை முன்னெடுத்து வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |