ஜனாதிபதி அனுரவிற்கு மனோ எம்.பி விடுத்த எச்சரிக்கை
எரிவாயு, எரிபொருள் மற்றும் மருந்து கொள்முதலில் உள்ள ஏகபோகக் கூட்டமைப்புகளை ஜனாதிபதி தகர்த்து வருவதாகக் கூறிவரும் வேளையில், அரசாங்கத்திற்குள்ளேயே புதிய கூட்டமைப்புகள் ஏற்கனவே உருவாகி வருவதாக தமிழ் முற்போக்குக் கூட்டமைப்பின் தலைவர் எம்.பி. மனோ கணேசன் எச்சரித்துள்ளார்.
நேற்று (20)நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது, ஆழமாக வேரூன்றிய ஏகபோகங்களை உடைப்பதற்கான முயற்சிகளுக்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவைப் பாராட்டியதாகவும், ஆனால் செல்வாக்கு மிக்க பெருநிறுவனக் கூட்டாளிகள் இப்போது வேறு வடிவங்களில் செயல்படுவதாகவும் அவர் எச்சரித்தார்.
வேறு வடிவங்களில் செயல்படும் பெருநிறுவனக் கூட்டாளிகள்
"இவர்கள் பழைய ஆட்டக்காரர்கள் அல்ல. ஒரு கூட்டமைப்பை அகற்றிவிட்டு, மற்றொரு கூட்டமைப்பை வைத்தால், எதுவும் மாறாது," என்று அவர் 'X' தளத்தில் பதிவிட்டுள்ளார்.
The President claims he’s dismantling monopoly cartels in gas, fuel, and medicine procurement. I praised @anuradisanayake for this at yesterday’s party leaders’ meeting, but also warned: new cartels are already emerging within his government. These aren’t old players, they’re… pic.twitter.com/8yqClEWqgz
— Mano Ganesan (@ManoGanesan) March 21, 2026
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |