நீண்ட நாட்களாக வரன் தேடியும் திருமணம் தள்ளி போகின்றதா - இதோ 48 நாட்களில் தீர்வு..!
இன்றைக்கு திருமணம் என்பது எத்தனையோ வரன்கள் பார்த்தும் பலருக்கும் கைகூடா ஒன்றாகவே காணப்படுகின்றது.
இவர்களுக்கு, காரணம் என்னவென்று தெரியாமலேயே திருமணம் தள்ளி போய்க்கொண்டே இருக்கும்.
இதனால் தீராத மனஉளைச்சல், கவலை ஆகியவை ஏற்படும். எத்தனையோ பரிகாரம், பூஜை எல்லாம் செய்தும் பலன் கிடைக்கவில்லை என்பவர்கள் எந்த மாதிரி பரிகாரத்தை செய்தால் உடனடியாக பலன் கிடைக்கும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
திருமண தடைக்கு காரணம்

சிலருக்கு பல காலமாக வரன் தேடி அலைந்தும், கோவில் கோவிலாக சென்று வழிபட்டும், ஜோதிடர்கள் சொன்ன பரிகாரம் அனைத்தையும் செய்தும் வரன் அமையாமல் திருமண தள்ளிப் போவதுண்டு.
இப்படி திருமண தள்ளி போவதற்கு ஜோதிட ரீதியாக பல காரணங்கள் சொல்லப்படுகிறது.
பொதுவாக ஒருவரின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் சரியாக இல்லை என்றால் திருமணத்தில் தாமதம், பிரச்சனை ஏற்படும்.
களத்திர ஸ்தானம் என்பது லக்னத்திற்கு ஏழாவது இடத்தை குறிக்கும்.
இது திருமணம், கணவன் அல்லது மனைவியை குறிப்பதாகும்.
மிக முக்கியமான வீடான இந்த ஏழாம் வீடானது பாவ கிரகங்களால் பாதிக்கப்பட்டிருந்தால் அதை களத்திர தோஷம் என்பார்கள்.
இப்படி களத்திர தோஷம் உள்ளிட்ட எந்த தோஷத்தால் பாதிக்கப்பட்டு, அதனால் திருமணம் தள்ளி போகிறது என்றால் இந்த 48 நாள் பரிகாரத்தை செய்தால் நிச்சயம் உடனடியாக பலன் தரும்.
திருமண தடை நீங்க பரிகாரம்

திருமணம் தள்ளி போகிறது என்கிறவர்கள் 48 நாட்களுக்கு தினமும் ஒரு வாழைப்பூ வாங்கி, அதில் உள்ள பூக்களை தனித்தனியாக உதிர்த்த, அவற்றை கொண்ட மாலையாக கோர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த மாலையை எடுத்துச் சென்று அருகில் பத்திரகாளி அம்மன், பிரத்யங்கரா தேவி அல்லது வாராஹி அம்மன் கோவில் எது இருந்தாலும் அங்கு சென்று விரைவில் திருமணமாக வேண்டும் என உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து, அம்மனுக்கு மாலையை சாற்ற வேண்டும்.
இவ்வாறு ஒரு நாள் கூட தவறாமல் 48 நாட்கள் சாற்ற வேண்டும்.
வாழைப்பூ பரிகாரம்

48 வது நாள் 9 கலசங்கள் எடுத்துக் கொண்டு அவற்றில் நவதானியங்களை போட்டு, அவற்றின் மீது பச்சரிசியை போட வேண்டும்.
அதற்கு மேல் 9 வாழைப்பூக்களை வாங்கி 9 கலசங்களின் மீதும் வைக்க வேண்டும்.
கோவிலில் உள்ள அல்லது ஏதாவது சாஸ்திரம் தெரிந்த புரோகிதரை வைத்து கணபதி ஹோமம் அல்லது வள்ளி-தெய்வசேனா சமேதா சுப்ரமணிய ஹோமம் இவற்றில் ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும்.
பூஜைகள் அனைத்தும் செய்து முடித்த பிறகு, 9 கலசங்களில் உள்ள வாழை பூக்களில் உள்ள பூக்களையும் உதிர்த்து 9 மாலைகளாக கோர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த மாலைகளை எடுத்துச் சென்று, அதே அம்மன் கோவிலில் உங்கள் பெயரில் அர்ச்சனை செய்து, அம்மனுக்கு சாற்ற வேண்டும்.
எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்

அதன் பிறகு திருச்சி, சமயபுரம் அருகில் அமைந்துள்ள திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோவிலுக்கு வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை சென்று பணம் செலுத்தி, திருமண பரிகார பூஜை செய்து விட்டு வந்தால் விரைவில் திருமணம் கைகூடும்.
திருப்பைஞ்ஞீலி கோவிலின் தலவிருட்சமாக வாழை மரம் உள்ளது.
இந்த கோவிலில் உள்ள கல்வாழையில் விளையும் பழம் இறைவனுக்கு மட்டுமே படைக்கப்படும்.
இது சாமானிய மனிதர்கள் உண்ணக் கூடாது.
வாழை துளிர்க்காத ஒரே தலம்

மற்ற ஊர்களில் வாழை மரத்தை வெட்டினால் அது மீண்டும் துளிர் விட்டு வளரும்.
ஒரு வாழை கன்றினை வைத்தால் அதிலிருந்து பல கன்றுகள் வரத் துவங்கி விடும்.
இதனால் தான் பெரியவர்கள் வாழ்த்தும் போது கூட வாழை உதாரணம் காட்டி வாழையடி வாழையாக என சொல்வார்கள்.
ஆனால் திருப்பைஞ்ஞீலி தலத்தில் வாழையை வெட்டினால் மீண்டும் துளிர் விடாது.
இந்த அதிசயம் இந்த தலத்தில் மட்டுமே நடக்கிறது.
அதனால் தான் திருமண தடை உள்ளவர்கள் இந்த தலத்திற்கு வந்து வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும் என சொல்லப்படுகிறது.